அணுசக்தி பயங்கரவாதத்தை மேற்கொள்ளும் புட்டின் – ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அணுசக்தி பயங்கரவாதம் செய்வதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், செர்னோபில் அருகே ரஷ்யா முன்னெடுத்து வரும் இராணுவ நடவடிக்கைகள் வரலாற்றை மீண்டும் நிகழ்த்தும் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.
செர்னோபில் பேரழிவின் 40வது ஆண்டு நினைவு நாளில் பேசிய ஜெலென்ஸ்கி, இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
ரஷ்ய-ஈரானிய ஷாஹெட் ஆளில்லா விமானங்கள் அந்த ஆலைக்கு மேல் தொடர்ந்து பறப்பதையும், கடந்த ஆண்டு அவற்றில் ஒன்று பாதுகாப்பு வளையத்தைத் தாக்கியதையும் ஜெலென்ஸ்கி சுட்டிக்காட்டினார்.
ரஷ்யா தனது பொறுப்பற்ற தாக்குதல்களை நிறுத்தும்படி கட்டாயப்படுத்துவதன் மூலம் இந்த “அணுசக்தி பயங்கரவாதத்தை” உலகம் தடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.





