உலகம் செய்தி

ஈரானிலுள்ள யுரேனியத்தை மீட்பது கடினம்: ட்ரம்ப்

ஈரானிலுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மீட்டெடுப்பது மிகவும் கடினமான பணியாகும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான விபரங்களை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ என்ற பெயரில் 125 போர் விமானங்கள் மூலம் ஈரானிய அணுசக்தி தளங்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டன என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், நிலத்தடியில் புதைந்துள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மீட்டெடுப்பது மிகவும் கடினமான மற்றும் நீண்ட காலப் பணியாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானிடமிருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிற்கு கொண்டு வர ட்ரம்ப் திட்டமிட்டாலும், இதற்கு இணக்கம் தெரிவிக்க ஈரான் மறுத்துவிட்டது. இந்நிலையிலேயே ட்ரம்ப் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!