நீரில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!
நுரைச்சோலையில் உள்ள தலுவா முகத்துவாரத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளம் பெண்களும், 25 வயதுடைய ஆண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த மூவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக நுரைச்சோலை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




