லெபனானில் பிரான்ஸ் அமைதிப்படை வீரர் உயிரிழப்பு
லெபனானின் தென்பகுதியில் இன்று காலை நடந்த தாக்குதலில், சர்வதேச அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பிரெஞ்சு வீரர் உயிரிழந்துள்ளார்.
இந்தத் தகவலை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் X தளத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐக்கிய நாடுகளின் இடைக்கால அமைதிப்படை பணியில் ஈடுபட்டிருந்த மேலும் மூன்று வீரர்கள் காயமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பே காரணமாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளதாக மக்ரோன் கூறியுள்ளார்.
இந்நிலையில் குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்ய லெபனான் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.





