உக்ரைன் மீது குண்டு மழைப் பொழிந்த ரஷ்யா!
உக்ரைனின் தலைநகரான கீவ் மற்றும் பிற நகரங்கள் மீது ரஷ்யப் படைகள் நேற்று நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 12 வயது சிறுவன் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“மருத்துவர்களின் கூற்றுப்படி, தலைநகரில் 12 வயது சிறுவன் மற்றும் 35 வயது பெண் என இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கீவ் நகருக்கான வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை தொடர்ந்து நடைமுறையில் உள்ளது என்றும், குடியிருப்பாளர்கள் தங்கள் தங்குமிடங்களிலேயே தங்கியிருக்குமாறும் கீவ் நகர மேயர் விட்டலி கிளிட்ச்கோ (Vitaliy Klitschko) வலியுறுத்தியுள்ளார்.
கீவ் மீதான ரஷ்ய வான்வழித் தாக்குதல்கள் அதிகாலையில் தொடங்கி , பொடில்ஸ்கி (Podilskyi), ஒபோலோன்ஸ்கி (Obolonskyi) மற்றும் டெஸ்னியான்ஸ்கி (Desnyanskyi) ஆகிய மாவட்டங்கள் முழுவதும் பரவலான சேதத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





