250 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை!
இஸ்ரேல் நேற்று (08) லெபனான் மீது நடத்திய மிகக்கடுமையான தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரானிடமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவுடன் நிரந்தர அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது “நியாயமற்றது” என ஈரான் சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





