வெடிப்பு சத்தங்களால் மூழ்கியது தெஹ்ரான்
மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே புதிய தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெஹ்ரான் நகரின் பல பகுதிகளில் வெடிப்பு சத்தங்கள் கேட்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களில் வான்வழி தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததுடன், வானில் ஏவுகணை தடுப்பு நடவடிக்கைகளின்போது வெடிப்புகள் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.
பிராந்தியத்தின் ஏனைய பகுதிகளிலும் பதற்றம் நிலவி வருகிறது.
கட்டார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் வெடிப்புகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அஜர்பைஜான் மீது இரண்டு ஈரானிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாக அந்நாடு தெரிவித்துள்ளது.





