புனித நகரில் ஈரான் உச்ச தலைவரின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு!
ஈரான் உச்ச தலைவரின் உடல், ஈரானின் புனித நகரமான மஷாத்தில் அடக்கம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டு தாக்குதலில் கொல்லப்பட்ட கமெனியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க ஈரான் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மஷாத் நகரில் திரண்டுள்ளனர்.
ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள், இராணுவத் தளபதிகள் , அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டுத் தூதர்கள் முன்னிலையில் முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.
போருக்கு மத்தியிலும் இதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
அதேவேளை, தலைநகர் தெஹ்;ரானில் அயதுல்லா அலி கமெனிக்கு பெரிய பிரியாவிடை விழா நடைபெறும் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்து உள்ளது.
இறுதிச்சடங்கு நடைபெறும் திகதி பற்றிய உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை.





