“இலங்கையில் 40 லட்சம் போதை மாத்திரைகள் மீட்பு”
இலங்கையில் 2025 ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இதற்கமைய 2025 இல் இலங்கை முழவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு – தேடுதல் நடவடிக்கைகளின்போது ஆயிரத்து 821 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், 17 ஆயிரத்து 189 கிலோ கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான F.U. வுட்லர் wootler தெரிவித்தார்.
3 ஆயிரத்து 865 கிலோ ஐஸ் போதைப்பொருள் மற்றும் சுமார் 40 லட்சம் போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
2026 இல் சுற்றிவளைப்பு நடவடிக்கை தொடரும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
2025 ஆம் ஆண்டில் 495 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் அழிக்கப்பட்டுள்ளன.
2026 ஆம் ஆண்டில் இதுவரை 171 கிலோ போதைப்பொருள் அழிக்கப்பட்டுள்ளன.





