ஐரோப்பா செய்தி

ஐந்து நாள் வேலைநிறுத்தம்: சுகாதார அமைப்புக்கு பெரும் அச்சுறுத்தல் – பிரதமர் அறிவிப்பு.

இங்கிலாந்தில் அடுத்த வாரம் திட்டமிடப்பட்டுள்ள ஐந்து நாள் வேலைநிறுத்தத்தைக் கைவிட வேண்டும் எனப் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் (Sir Keir Rodney Starmer) மருத்துவர்களை வலியுறுத்தியுள்ளார். காய்ச்சல் பரவலின் போது வேலைநிறுத்தம் பொருத்தமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து முழுவதும் அதிகரித்து வரும் காய்ச்சல் காரணமாக, வைத்தியசாலைகள் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்குப் பின்னான “மிகவும் ஆபத்தான தருணத்தில்” இருப்பதாகவும், வேலைநிறுத்தங்கள் சுகாதார அமைப்பையும் நோயாளிகளையும் “கடுமையான ஆபத்தில்” ஆழ்த்தும் என்றும் பிரதமர் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில், மருத்துவர்கள் சங்கமான பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் (BMA), வேலைநிறுத்தத்தைக் கைவிடலாமா என்பதைக் கண்டறியக் கருத்துக் கணிப்பு நடத்தி வருகிறது. அதன் முடிவுகள் திங்கட்கிழமை வெளியிடப்படும். மருத்துவர்கள் வேலைநிறுத்தத்திற்கு எதிராக வாக்களிக்காவிட்டால், எதிர்வரும் டிசம்பர் 17ஆம் திகதி முதல் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்தக் குளிர்காலத்தில் காய்ச்சல் ஆரம்பத்தில் வந்துள்ள நிலையில், கடந்த வாரம் இங்கிலாந்தில் நாளொன்றுக்குச் சராசரியாக 2,660 நோயாளிகள் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது முந்தைய வாரத்தை விட 55% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

AJ

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!