உறுதிமொழிகளை மறந்து செயல்பட அரசுக்கு இடமளியோம்!
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. வலியுறுத்தினார்.
இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
“ பேரிடர் இழப்பு தொடர்பில் எங்கு தவறு நடந்துள்ளது என்பதை கண்டறியவே நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்குமாறு கோரியுள்ளோம். அதன்மூலம் உண்மை தெரியவரும்.
அதேபோல பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். இதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை நாம் கண்காணிப்போம். இது தொடர்பான எமது கடப்பாட்டை உரிய வகையில் நிறைவேற்றுவோம்.” எனவும் நாமல் ராஜபக்ச எம்.பி. குறிப்பிட்டார்.





