ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனா குடும்பத்தினருக்கு புதிய தண்டனை
ஷேக் ஹசீனா(Sheikh Hasina) மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதான ஊழல் வழக்குகளில், முன்னாள் பிரதமர், அவரது சகோதரி மற்றும் அவரது மருமகள், பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் துலிப் சித்திக்(Tulip Siddiqui) ஆகியோருக்கு புதிய தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
டாக்காவில்(Dhaka) உள்ள பர்பாச்சல்(Parbachal) நியூ டவுன் திட்டத்தின் கீழ் நிலங்களை ஒதுக்கீடு செய்ததாக கூறப்படும் வழக்கில், பதவி நீக்கப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா, அவரது சகோதரி ஷேக் ரெஹானா(Sheikh Rehana) மற்றும் அவரது மருமகளும், பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினருமான துலிப் சித்திக் ஆகியோருக்கு வங்கதேச நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனையும், கடந்த ஆண்டு நடந்த வன்முறை போராட்டத்தின் போது அவருடன் இருந்த அவரது சகோதரி ஷேக் ரெஹானாவுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் துலிப் சித்திக்குக் டாக்கா நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.





