இலங்கை அணிக்கு 300 ஓட்ட இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான்
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட உள்ளது.
அந்தவகையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில்(Rawalpindi) மைதானத்தில் நடைபெறுகிறது.
நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 299 ஓட்டங்கள் குவித்தது.
பாகிஸ்தான் அணி சார்பில் சல்மான் ஆகா(Salman Agha) 105 ஓட்டங்களும் ஹுசைன் டலட்(Hussain Talat) 62 ஓட்டங்களும் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை அணி சார்பில் வணிந்து ஹசரங்க(Wanindu Hasaranga) 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
இந்நிலையில், 300 ஓட்ட இலக்கை நோக்கி விளையாடிவரும் இலங்கை அணி 4 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்கள் பெற்று விளையாடி வருகிறது.





