பாகிஸ்தானில் நீதிமன்ற நுழைவாயிலுக்கு அருகில் குண்டுவெடிப்பு – 12 பேர் பலி!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கு வெளியே இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் பலர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குண்டு வெடிப்பு தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை. தடயவியல் குழுவிடமிருந்து அறிக்கை கிடைத்த பிறகு கூடுதல் விவரங்களை வழங்க முடியும்” என்று அந்நாட்டின் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள மிகவும் பரபரப்பான நீதிமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலை வெளிப்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 1 times, 3 visits today)





