இந்தியாவில் இடம்பெற்ற கோர விபத்து – 16 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்!
இந்தியாவில் சரளைக் கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியொன்று பொதுப் போக்குவரத்துப் பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 08 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தெலுக்கான மாநிலத்திற்கு அருகே இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் இருந்த பயணிகள் அதிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதகாவும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 02 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
அதேபோல் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.





