உலகம்

இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்குப் பின்பு காசாவில் ஆயுதக் குழுக்களுக்கு இடையே மோதல்; 27 பேர் பலி

காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் அங்கு ஹமாஸ் அமைப்புக்கும் ஆயுதமேந்திய மற்றொரு குழுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு காசா நகரில் உள்ள டெல் அல்-ஹவா(Tell al-Hawa) பகுதியில் 300-க்கும் மேற்பட்ட ஹமாஸ் வீரர்கள் டக்முஷ் என்ற ஆயுதக் குழுவினர் பதுங்கியிருந்த குடியிருப்பு வளாகத்தைச் சுற்றி வளைத்துத் தாக்க முயன்றபோது மோதல் வெடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சண்டையில் 8 ஹமாஸ் போராளிகளும் எதிர்த்தரப்பில் 19 பேரும் உயிரிழந்தனர்.

மேலும் இந்த மோதலில் சலே அல்ஜஃபராவி(Saleh Aljafarawi) என்ற 28 வயது பத்திரிகையாளர் உயிரிழந்ததாக அல்ஜசீரா( Al Jazeera)தெரிவித்துள்ளது.

இரண்டு ஹமாஸ் போராளிகளைத் டக்முஷ் குழு கொன்றதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்