சிக்கிமில் உள்ள சோ லா பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கும் இந்தியா

சிக்கிமில் உள்ள சோ லா பகுதியை இந்தியா தனது ரன்பூமி அல்லது போர்க்கள சுற்றுலா முயற்சியின் ஒரு பகுதியாக சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கும் என்று சிக்கிம் அரசாங்கத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டில் பதற்றத்தை சந்தித்த இந்தியா, சீனா மற்றும் பூட்டான் இடையேயான மூலோபாய முச்சந்தியான டோக்லாம் அருகே உள்ள பகுதியும் இந்த முயற்சியின் கீழ் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படும் என்று சிக்கிம் கூடுதல் தலைமைச் செயலாளர் சி.எஸ். ராவ் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாவை ஆதரிக்கும் வகையில் இந்தப் பகுதிகளுக்கு அருகிலுள்ள உள்கட்டமைப்பை மாற்றுவதில் சிக்கிம் அரசு செயல்பட்டு வருவதாக ராவ் தெரிவித்துள்ளார்.
“போர்க்கள சுற்றுலாவிற்காக இந்தியா முழுவதும் சுமார் 30 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, போர்க்கள சுற்றுலாவிற்காக சிக்கிமில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பை அமைப்பதற்காக நாங்கள் இராணுவத்துடன் தொடர்பில் இருக்கிறோம்.”என்று ராவ் குறிப்பிட்டுள்ளார்.
சிக்கிமில் உள்ள நாது லா ஏற்கனவே ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.
டோக்லாம் முச்சந்தியின் இந்தியப் பகுதியைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படும் என்று ராவ் குறிப்பிட்டுள்ளார்.