இந்து சமுத்திரத்தில் மூழ்கிய சீன மீன்பிடி கப்பல் : 7 பேரின் உடல்கள் மீட்பு!

இந்துசமுத்திரத்தில் மூழ்கிய சீன கப்பலில் இருந்து ஏழுபேரின் உடல்களை இலங்கை சுழியோடிகள் மீட்டுள்ளனர்.
மத்திய இந்து சமுத்திரத்தில் சீனாவின் மீன்பிடிக் கப்பல் ஒன்று மூழ்கியது. இதில் இருந்து ஏழுபேரின் உடல்களை சுழியோடிகள் மீட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை 39 பேருடன் மூழ்கிய மீன்பிடிக்கப்பலில் இருந்தே ஏழுபேரின் சடலங்களை இலங்கை சுழியோடிகள் மீட்டுள்ளனர்.
கப்பலின் கபின் பகுதியில் இலங்கை சுழியோடிகள் உடல்களை கண்டுபிடித்தனர் என சீனாவின் செய்தி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)