விளையாட்டு

Playoff வாய்ப்பை இழந்தது ஹைதராபாத்

நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதன் மூலம் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது ஹைதராபாத் அணி.

ஹைதராபாத்தில் ராஜிவ் காந்தி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச முடிவு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் இறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் கருண் நாயர், டுப்ளெஸிஸ் இருவரும் ஓப்பனிங் ஆடினர்.

இதில் கருண் நாயர் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். டுப்ளெஸிஸ் 3 ரன்களுடன் நடையை கட்டினார். அபிஷேக் பொரெல் 8, கே.எல்.ராகுல் 10, அக்சர் படேல் 6, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 41, விப்ராஜ் நிகாம் 18, அஷுடோஷ் சர்மா 41, மிட்சல் ஸ்டார்க் 1 என 20 ஓவர் முடிவில் 133 ரன்கள் எடுத்திருந்தது டெல்லி அணி.

ஆனால் அதன் பிறகு மழை தொடங்கியதால் ஆட்டம் தாமதம் ஆனது. பின்னல் மழை தொடர்ந்து விடாமல் பெய்து வந்ததால் ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டன. இந்த போட்டி ரத்தானதன் மூலம் ஹைதராபாத் அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது. டெல்லி அணி 13 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.

 

 

(Visited 2 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
Skip to content