புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

கையில் குழந்தை – கணவருக்கு உதட்டுடன் முத்தம்… முதன்முறையாக வெளியான படங்கள்

நடிகை அமலா பாலுக்கு ஜூன் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு இலை என்று அமலா பால் பெயர் வைத்து இருக்கிறார்.

குழந்தை பிறந்த பின்னும் இணையத்தில் கணவரோடு இருக்கும் போட்டோவை ஷேர் செய்து வந்த அமலா பால், ஓணம் பண்டிகையொட்டி தனது குழந்தையின் போட்டோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ரோமன் கத்தோலிக்க முறையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருமணத்திற்கு பின்னரும் அவ்வப்போது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள், ரிலீஸ் உள்ளிட்டவைகளை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வந்த அமலா பால், திருமண சில நாட்களிலே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதனால், அவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்தாரா என்ற சர்ச்சை எழுந்தது.

இதைத்தொடர்ந்து, நடிகை அமலா பாலுக்கு ஜூன் 11ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்த போட்டோவை அமலா பால் இணையத்தில் வெளியிட்டு குழந்தைக்கு இலை (ILAI) என பெயர் வைத்து உள்ளதாக அறிவித்தார்.

குழந்தை பிறப்பிற்கு பிறகு கணவருடன் விதவிதமான போடடோக்களை வெளியிட்டு வந்த அமலா பால், முதன் முறையாக தனது குழந்தையின் போட்டோவை வெளியிட்டு ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரள பாரம்பரிய உடையில் கையில் குழந்தையை வைத்துக்கொண்டு, கணவருக்கு முத்தம் கொடுத்துள்ளார்.

இந்த போட்டோவைப் பார்த்த ஃபேன்ஸ், வாவ், செம க்யூட் புள்ள லட்டு மாதிரி இருக்கு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இணையத்தில் இந்த போட்டோ டிரெண்டாகி வருகிறது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content