இலங்கை செய்தி

டெங்கு நோய் குறித்து வைத்தியரின் அறிவிப்பு

 

கடந்த 4 மாதங்களில் மட்டும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30;’000ஐ தாண்டியுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் உதவி செயலாளர் டொக்டர் லஹிரு கொடிதுவக்கு தெரிவித்தார்.

அவர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளனர்.

அதன் தரவுகளின்படி அன்றைய காலகட்டத்தில் டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆகும்.

மே மாதத்தின் முதல் சில நாட்களில் மட்டும் நாடளாவிய ரீதியில் 700 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தற்போது கம்பஹா மாவட்டத்தில் டெங்கு அதிக ஆபத்துள்ள நிலையில் காணப்படுகின்றது. அதுமட்டுமின்றி களுத்துறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் டெங்கு அபாயம் காணப்படுகின்றது.

தீவில் பதிவாகும் டெங்கு நோயாளர்களில் கிட்டத்தட்ட 50% மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளது.

priya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!