தீவிர பாதுகாப்பில் இலங்கை அச்சகத் திணைக்களம்

ஜனாதிபதி தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்ததன் பின்னர் அதற்கான சகல வேலைகளையும் ஆரம்பிப்பதற்கு சகலமும் தயாராகி வருவதாக அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் தலைவர் கங்கனி லியனகே தெரிவித்துள்ளார்.
இனி வரும் எந்த தேர்தலுக்கும் தனது துறை தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் அறிவிப்புக்கு பிறகு தேர்தல் ஆணைக்குழுவின் செலவுகள் குறித்து தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன், கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் தலைவர் கங்கானி லியனகே மேலும் தெரிவித்தார்.
(Visited 47 times, 1 visits today)