செய்தி

வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு இலங்கை வந்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டுவந்த பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் துபாயில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்துவிட்டு நாடு திரும்பியபோதே கைது செய்யப்பட்டள்ளார். இவர் களனி பகுதியை சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார்.

துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர், நேற்று அதிகாலை 5.50 மணியளவில் அனைத்து சோதனைகளையும் முடித்துக்கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியேற முற்பட்டபோதே கைதுசெய்யப்பட்டார்.

இவர் கொண்டு வந்த இரண்டு பயணப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 20,000 “மான்செஸ்டர்” சிகரெட்டுகள் அடங்கிய 100 சிகரெட் பெட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர் எதிர்வரும் 17ஆம் திகதி சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி