இலங்கை

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த ஹரிகரன் தன்வந்தை கௌரவிக்கும் நிகழ்வு!

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து உலக சாதனை படைத்த திருக்கோணமலை இந்துக் கல்லூரியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் ஹரிகரன் தன்வந்தைக் கனடா திருக்கோணமலை நலன்புரிச் சங்கம் ஒரு இலட்சம்  ரூபாய் பரிசுத் தொகையும் வெற்றிக் கிண்ணமும் வழங்கிக் கௌரவித்துள்ளது.

கனடா திருகோணமலை நலன்புரிச் சங்கத் தலைவர்  ரகுநாதன், அதன் காப்பாளரும் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தின் தலைவருமாகிய  சண்முகம் குகதாசன் ஆகியோர் இணைந்து இந்த பரிசில்களை வழங்கி வைத்துள்ளனர்.

திருக்கோணமலை இந்துக் கல்லூரியில் மாணவர் ஒன்றுகூடலின் பொழுது நடைபெற்ற இந்த கௌரவிப்பு நிகழ்வில்,  கல்லூரி முதல்வர், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தன்வந்தின் பெற்றோர் உள்ளடக்கிய பலரும்  கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் பொழுது உரை ஆற்றிய  சண்முகம் குகதாசன் அவர்கள் இச்சாதனை புரிந்த மாணவன் நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்திருப்பதாகவும் மென் மேலும் முன்னேறி ஒலிம்பிக் வரை செல்ல வேண்டும் எனவும் வாழ்த்தினார்.

(Visited 22 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!