இந்தியா

மகாராஷ்டிராவில் சுட்டும் தீராத ஆத்திரம்…அரிவாளால் வெட்டி இளைஞர் கொடூரக் கொலை!

மகாராஷ்டிராவில் தேநீர் கடையில் அமர்ந்திருந்த வாலிபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும், 8 பேர் கொண்ட கும்பல் படுகொலை செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில், கடந்த 16ம் திகதி வாலிபர் ஒருவர் தனது நண்பர்களுடன், கடை ஒன்றில் அமர்ந்து தேநீர் அருந்தி கொண்டிருந்தார். அந்த நபர் செல்போனில் மூழ்கியிருந்த போது, அவருக்கு பின்னால் கடைக்கு வந்த இரண்டு பேர் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கிகளை எடுத்து அந்த நபரின் பின்புறமாக சுட்டு உள்ளனர். இதில் படுகாயம் அடைந்து டேபிளிலேயே விழுந்த அந்த நபரை, பின்னாலேயே வந்த 6 பேர் தங்கள் கைகளில் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அடுத்தடுத்து சரமாரியாக வெட்டித் தள்ளினர். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்து அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீஸார் தீவிர விசாரணை

இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள்,தேநீர் கடையில் இருந்து அலறி அடித்து தப்பி ஓடினர். படுகொலைக்குப் பின்னர் குற்றவாளிகள் 8 பேரும் உடனடியாக கடையிலிருந்து தப்பிச் சென்றனர். இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த நபரின் பெயர் அவினாஷ் தான்வே என்பதும், அவர் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததும் தெரியவந்தது.

கடையிலிருந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கொலை செய்யப்பட்ட நபருக்கு எதிரான குழுவை சேர்ந்தவர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டார்களா என்கிற கோணத்தில் தற்போது பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!