ஐரோப்பா

ஜெர்மனியில் அகதி விண்ணப்பம் செய்தவர்களுக்கு வெளியான தகவல்

ஜெர்மனிக்கு வருகின்ற அகதிகளை கட்டுப்படுத்துவதற்காக ஜெர்மன் அரசாங்கமானது அண்மைக் காலங்களில் பல சட்டங்களை இயற்றி வருகின்றது.

ஜெர்மன் நாட்டுக்குள் வந்த அகதிகள் தங்களது அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்களை வெகுவிரைவில் நாடு கடத்துவதற்கு ஏதுவான சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருந்தது.

இதேவேளையில் ஜெர்மன் நாட்டுக்குள் வருகின்ற அகதிகளை ஜெர்மன் நாட்டில் வைத்து அவர்களது அகதி விண்ணப்பத்தை விசாரணை செய்யாது 3வது நாடுகள் குறிப்பாக ஆப்பிரிக்க நாடான ருவண்டாவில் வைத்து விசாரிப்பதற்குரிய ஆலோசணைகள் ஜெர்மன் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் ஜெர்மனியின் CSU கட்சி என்று சொல்லப்படுகின்ற ஒரு கட்சியுடைய முக்கிய அரசியல் பிரமுகரான டோபிரிங் அவர்கள் வெகுவிரைவில் ஜெர்மன் நாடானது ருகண்டா நாட்டுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தை பிரதி பலித்து இருக்கின்றார்.

இந்த விடயத்தில் ஜெர்மன் அதிபர் ஓலா சொல்ஸ் அவர்கள் எதிர்வரும் கிழமை மாநில முதல்வருடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வுள்ளதாக தெரியவந்துள்ளது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content