ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 குழந்தைகள் மரணம்

வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐந்து குழந்தைகள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஷாதி அகதிகள் முகாமில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் குழுவை இஸ்ரேலிய ஆளில்லா விமானம் தாக்கியதாகவும், தாக்குதலில் பலர் காயமடைந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களில், வடக்கு காசா மீது இஸ்ரேலியப் படைகள் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

UNRWAன் கூற்றுப்படி, தெற்கு நோக்கி தப்பிச் செல்ல முயன்ற குடியிருப்பாளர்கள் சுடப்பட்டதால், வடக்கில் சுமார் 400,000 பேர் சிக்கியுள்ளனர்.

தெற்கில் பாதுகாப்பான பகுதிகள் இல்லாததால் தொடர்ந்து இருக்க முடிவு செய்தவர்களும் பலமுறை பாதிக்கப்பட்டுள்ளனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி