இலங்கை

இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த பெண் உயிரிழப்பு!

  • November 21, 2025
  • 0 Comments

இத்தாலியில் இருந்து இலங்கை வந்த பெண் ஒருவர் நேற்று திடீரென உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை தற்காலிக வசிப்பிடமாகக் கொண்டிருந்த மாலினி யோகராசா (வயது 58)  என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூச்செடுப்பதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை முன்னெடுத்து வருகிறார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

02 அமைச்சகங்களின் செலவின தலைப்புகள் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!

  • November 21, 2025
  • 0 Comments

கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சகம் மற்றும் கைத்தொழில் மற்றும் நிறுவன மேம்பாட்டு அமைச்சகத்தின் செலவினத் தலைப்புகள் இன்று (21) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தின் 6வது நாளான இன்று,  குறித்த சட்டமூலங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளன.  

உலகம்

கனடாவில் கரடிகள் அட்டகாசம் – பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் படுகாயம்!

  • November 21, 2025
  • 0 Comments

கனடாவின் (Canada) பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாகாணத்தில் பாடசாலை குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை கிரிஸ்லி கரடி (grizzly bear ) தாக்கியுள்ளது. இதில் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வான்கூவரில் (Vancouver) இருந்து வடமேற்கே 700 கிலோமீட்டர் (435 மைல்) தொலைவில் உள்ள  பெல்லா கூலாவில் (Bella Coola) நேற்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று முழுவதும் குறித்த பகுதியில் கரடியின் நடமாட்டம் இனங்காணப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் ஆயுதம் ஏந்திய […]

உலகம்

பிரேசிலில் ஐ.நா காலநிலை பேச்சுவார்த்தை அரங்கத்தில் தீவிபத்து – 13 பேர் வைத்தியசாலையில்!

  • November 21, 2025
  • 0 Comments

பிரேசிலில் ஐ.நா. காலநிலை பேச்சுவார்த்தைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட அரங்குகளில் நேற்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் 13 பேர்  சுவாசப் பிரச்சினைகளுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் ஆறு நிமிடங்களில் தீ கட்டுப்படுத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அத்துடன் தீவிபத்தை தொடர்ந்து குறித்த அரங்கம் 07 மணிநேரம் மூடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டர் செயலிழப்பு அல்லது ஒரு அரங்கில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் தீயைத் தூண்டியிருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் உள்ளுர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர். மேலும் சம்பவம் குறித்த […]

உலகம்

நைஜீரியாவில் கிறிஸ்தவ பாடசாலையில் ஆயுத முனையில் கடத்தப்பட்ட மாணவர்கள்!

  • November 21, 2025
  • 0 Comments

நைஜீரியாவில் அண்மையில் 25 மாணவிகள் கடத்தப்பட்ட நிலையில் தற்போது 52 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நைஜர் மாநிலத்தின் பாபிரி (Papiri)சமூகத்தில் உள்ள செயிண்ட் மேரிஸ் (St. Mary’s) பாடசாலையில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உள்ளுர் ஊடகங்கள் 52 குழந்தைகள் கடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் உண்மையான எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது. “காவல்துறை தந்திரோபாயப் பிரிவுகள், இராணுவக் குழுக்கள் மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, கடத்தப்பட்ட மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு […]

இலங்கை

இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

  • November 21, 2025
  • 0 Comments

இலங்கையின் 14 மாவட்டங்களுக்கு இன்று  சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒன்பது மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு, சபர்கமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பல இடங்களுக்கு வானிலை ஆய்வுத்துறை மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும் என்று திணைக்களம் எச்சரிக்கிறது. மேலும் மின்னல் செயல்பாட்டினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு […]

பொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ பட ஆடியோ லாஞ்ச்… வெளியானது உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

  • November 21, 2025
  • 0 Comments

விஜயின் சினிமா வாழ்க்கையில் இறுதி அத்தியாயம் தான் ஜனநாயகன். இதை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்பார்த்துள்ளனர். அந்த வகையில், ஜனநாயகனின் ஒவ்வொரு அப்டேட்டுகளும் மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றன. இப்போது ஜனநாயகன் படத்திலிருந்து மிக முக்கிய அறிவிப்பு வெளியாகி. அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஆடியோ லாஞ்ச் தான் அந்த செய்தி. கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்ட பதிவில், வருகிற டிசம்பர் 27ம் திகதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் ஆடியோ வெளியீட்டு விழா […]

உலகம்

துபாய் விமான கண்காட்சியில் ஏற்பட்ட விபரீதம் – விமானி பலி!

  • November 21, 2025
  • 0 Comments

துபாய் விமான கண்காட்சியில் பங்கேற்ற இந்திய விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் அவ்விமானத்தை இயக்கிய  விமானி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படும் இந்திய HAL தேஜாஸ் என்ற போர் விமானமே இன்று விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. விமானம் கட்டுப்பாட்டை இழந்து, விபத்துக்குள்ளாகும் முன்பு நேரடியாக தரையை நோக்கிச் செல்வதை காணொளிகள் காட்டுகின்றன. “விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம்  இந்திய விமானப்படை ஆழ்ந்த வருத்தத்தை பகிர்ந்து கொண்டுள்ளது.

இலங்கை

என்.பி.பி. ஆட்சியை விரட்ட சஜித்துக்கும் அழைப்பு!

  • November 21, 2025
  • 0 Comments

கூட்டு எதிரணியின் அடுத்த கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். நுகேகொடை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ 76 வருடகாலம் நாட்டை நாம் நாசமாக்கவில்லை. 1965 இல் ஜே.வி.பி. உதயமான பின்னரே நாடு வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. எல்லா திட்டங்களையும் அவர்கள் குழப்பினார்கள். எனவே, 76 வருடகால சாபம் நாம் அல்லர். ஜே.வி.பியினர் என்பதை புரிந்துகொள்ள […]

அரசியல் இலங்கை

ஆட்சியைக் கவிழ்ப்போம்: நாமல் சபதம்! 

  • November 21, 2025
  • 0 Comments

“துறைமுகத்தில் நங்கூரமிட்டு வைப்பதற்காக கப்பல் நிர்மாணிக்கப்படுவதில்லை. அது ஆழ்கடலில் பயணித்தாக வேண்டும். புயல் வரும், சவால்களும் வரும். கௌரவ ஜனாதிபதி அவர்களே, கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே இந்த அரசாங்கம் கவிழ்க்கப்படும் என்பதை உங்கள் அரசாங்கத்துக்கு நினைவு படுத்துகின்றோம். அதற்காகவே மக்கள் சக்தி கட்டியெழுப்படுகின்றது.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். எனவே, நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி, அரசாங்கம் […]