உலகம் செய்தி

இஸ்ரேலுக்கு எதிராக யார் கையை உயர்த்தினாலும் அவர்களின் கை துண்டிக்கப்படும்!

  • December 14, 2025
  • 0 Comments

ஹமாஸ் தலைவர் ரேத் சாத்தை (Raed Saad) படுகொலை செய்ய உத்தரவிட்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) நேற்று உறுதிப்படுத்தியுள்ளார். இஸ்ரேலியப் படைகள் மீதான தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கத்தோடு மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலுக்கு எதிராக யார் கையை உயர்த்தி, ஐடிஎஃப் வீரர்களுக்கு தீங்கு விளைவித்தாலும், அவர்களின் கை காசாவிலும் மற்ற எல்லா இடங்களிலும் துண்டிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலின் அனைத்து குடிமக்களின் சார்பாக,  காயமடைந்த போராளிகள் விரைவில் […]

அரசியல் இலங்கை செய்தி

பேரிடர் முகாமைத்துவத்திற்கான சிறப்பு தேசிய சபைக் கூட்டம் நாளை

  • December 14, 2025
  • 0 Comments

பேரிடர் முகாமைத்துவத்திற்கான சிறப்பு தேசிய சபைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். பிரதம அமைச்சர் இணைத்தலைமை வகிப்பார் 2004 ஆம் ஆண்டு சுனாமியைத் தொடர்ந்து, 2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க பேரிடர் முகாமைத்துவ சட்டத்தின் கீழ் இந்த சபை நிறுவப்பட்டது. எனினும், அச்சபையின் செயல்பாடு இயங்கா நிலையிலேயே இருந்து வந்தது. எனவே , மேற்படி சட்டத்தில் […]

அரசியல் இலங்கை செய்தி

இந்தியாவுக்கு இணையாக சீனாவும் களத்தில்: பீஜிங் உயர்மட்ட தலைவர் 23 ஆம் திகதி கொழும்பு விஜயம்!

  • December 14, 2025
  • 0 Comments

சீனாவின் உயர்மட்ட அரசியல் தலைவர் ஒருவர் கொழும்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 23 ஆம் திகதி அவரது விஜயம் இடம்பெறும் என்று ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீன அரசாங்கத்தின் மூன்றாவது அதிஉயர் அதிகாரம் படைத்தவரான, சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலையியல் குழு தலைவரான சோ லெஜி என்பவரே இரு நாள் விஜயமாக இலங்கை வருகின்றார். பேரிடருக்குப் பின்னர், இலங்கைக்கு உதவுவதில் இந்தியாவும், அமெரிக்காவும் அதிகளவில் கவனம் செலுத்தி வருகின்றது. இந்நிலையிலேயே தமது உதவி […]

அரசியல் இலங்கை செய்தி

பயங்கரவாத சட்டத்துக்கு பதிலாக வரவுள்ள புதிய சட்டத்தின் ஏற்பாடுகள் எவை?

  • December 14, 2025
  • 0 Comments

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டத்தின் கீழ், இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என தெரியவருகின்றது. சண்டேடைம்ஸ் வார இதழ் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்குரிய ஏற்பாடு இடம்பெற்றுவருகின்றது. இச்சட்டத்தை நீக்குமாறு அனைத்துலக சமூகமும் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது. இந்நிலையில் ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் -இலக்கம்-2026’ என்ற புதிய சட்ட வரைவு, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சினால் […]

அரசியல் இலங்கை செய்தி

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை சாத்தியமா?

  • December 14, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக குற்றப் பிரேரணையை முன்வைப்பதற்குரிய நடவடிக்கையை முன்னெடுக்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிடம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மொட்டு கட்சி தலைமையகத்தில் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே கட்சி செயலாளர் சாகர காரியவசம் இந்த விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார். தாங்கள் எதை கூறினாலும் மக்கள் நம்பக்கூடும் என்ற நோக்கிலேயே தற்போது எதிரணி எனக் கூறிக்கொள்ளும் தரப்பு கருத்துகளை வெளியிட்டுவருகின்றது. இதனை உறுதிப்படுத்துகின்றது சட்டத்தரணி சாகர […]

இலங்கை

மலேசியாவில் இருந்து வருகை தந்த நபர் விமான நிலையத்தில் கைது!

  • December 14, 2025
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2.300 கிலோகிராம் ஹெராயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. குறித்த நபர் மலேசியாவில் இருந்து இலங்கைக்கு வருகைதந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகம்

அமெரிக்காவில் பல்கலைக்கழகம் அருகில் துப்பாக்கிச்சூடு – இருவர் பலி!

  • December 14, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தில் மேலும் எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சந்தேக நபர் இன்னும் கைது செய்யப்படாததால், அப்பகுதியில் உள்ள மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்து பல்கலைக்கழகம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. மேலும் பொதுமக்கள் […]

உலகம் செய்தி

சிரியாவில் IS தீவிரவாத தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பாளர் மரணம்

  • December 13, 2025
  • 0 Comments

சிரியாவில்(Syria) இஸ்லாமிய அரசு(IS) குழு உறுப்பினர் ஒருவர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்களும், ஒரு அமெரிக்க மொழிபெயர்ப்பாளரும்(interpreter) கொல்லப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது. சிரியாவின் பால்மைராவில்(Palmyra) நடந்த இந்த தாக்குதலில் மேலும் மூன்று சேவை உறுப்பினர்கள் காயமடைந்ததாகவும் துப்பாக்கிதாரி உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கொல்லப்பட்டவர்களின் அடையாளங்கள் அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்குத் தெரிவிக்கப்படும் வரை 24 மணி நேரம் மறைக்கப்பட்டுள்ளன என்று அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதலுக்கு இதுவரை […]

உலகம் செய்தி

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் மூத்த தளபதி மரணம்

  • December 13, 2025
  • 0 Comments

காசாவில்(Gaza) நடந்த வாகனத் தாக்குதலில் ஹமாஸின்(Hamas) மூத்த தளபதி ஒருவரைக் கொன்றதாக இஸ்ரேல்(Israel) தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவமும் ஷின் பெட்(Shin Bet) பாதுகாப்பு நிறுவனமும் ஒரு கூட்டு அறிக்கையில், காசா நகரில் ஹமாஸின் இராணுவப் பிரிவான கஸ்ஸாம்(Qassam ) படைப்பிரிவுகளின் ஆயுத உற்பத்தித் தலைவரான ரயீத் சாத்(Raed Saad) கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது அக்டோபர் 7ம் திங்க்தி காசா நகரத்திற்கு கிழக்கே இஸ்ரேலிய சமூகங்கள் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியபோது ரயீத் சாத் மிக முக்கியமான கஸ்ஸாம் தளபதிகளில் […]

இலங்கை செய்தி

பௌத்த பிக்குகளுக்கு நேரம் இல்லையாம்!!

  • December 13, 2025
  • 0 Comments

திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அரச மரத்தின் கிளை உடைந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக தேசிய உணவு விற்பனை நிலையத்துக்கு முன்னால் விழுந்து காணப்படுகின்றது. தற்போது அசாதாரண சூழ்நிலை காரணமாக பௌத்த பிக்குகளுக்கு நேரமில்லாமையினால் குறித்த மரக்கிளை அகற்றப்படாமல் காணப்படுகின்றது. வைத்தியசாலைக்கு சிலிண்டர் ஏற்றிக் கொண்டு வந்த லொறியின் மேல் பகுதி பட்டமையால் அரச மரத்தின் கிளை உடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது. திருகோணமலையில் பௌத்த பிக்குகளின் கொடுப்படியினால் கிளையை அகற்ற முடியாத நிலைக்கு வைத்தியசாலை நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது. மக்களுக்கு […]

error: Content is protected !!