இலங்கை வட அமெரிக்கா

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து விலகிய அமெரிக்கா

  • February 5, 2025
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் மற்றும் பலஸ்தீன அகதிகளுக்கு உதவி வழங்கும் நிறுவனத்திலிருந்து அமெரிக்கா விலகியுள்ளது. அதில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த சில வாரங்களாக பல சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்துள்ளார். பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதும், உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகியதும் அவற்றில் முக்கியமானவை. இந்த சூழலில், ஐக்கிய நாடுகள் சபையின் […]

இலங்கை

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட பொதியில் சிக்கிய மர்மம்

  • February 5, 2025
  • 0 Comments

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு விமான தபால் சேவை மூலம் அனுப்பப்பட்ட பொதியொன்றிலிருந்து குஷ் மற்றும் கொக்கேன் போதைப்பொருட்கள் இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பொதியானது பிரித்தானியாவிலிருந்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள முகவரி ஒன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ராகம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் […]

இலங்கை செய்தி

இலங்கையில் நீர் கட்டணத்தை 10 முதல் 30 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை

  • February 5, 2025
  • 0 Comments

இலங்கையில் நீர் கட்டணத்தை 10 முதல் 30 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதோடு ஒப்பிடுகையில் தண்ணீர் கட்டணங்களைக் குறைப்பதில் கவனம் செலுத்தப்படுவதாக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். தண்ணீர் கட்டணக் குறைப்பு குறித்து ஆராய ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நீர் கட்டணங்களைக் குறைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடுத்த சில நாட்களுக்குள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் […]

பொழுதுபோக்கு

பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்

  • February 5, 2025
  • 0 Comments

பழம்பெரும் நடிகை புஷ்பலதா சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஏராளமான மொழிப் படங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை புஷ்பலதா. கடந்த 1958-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘செங்கோட்டை சிங்கம்’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட நடிகர்களுடன் 100-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். ரஜினியின் ‘நான் அடிமை இல்லை’, கமல்ஹாசனின் ‘கல்யாணராமன்’, ‘சகலகலா வல்லவன்’ உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். […]

பொழுதுபோக்கு

கும்முன்னு இருந்த நடிகை ருசி பார்த்து விரட்டி விட்ட இயக்குனர்

  • February 5, 2025
  • 0 Comments

பெங்களூர் தக்காளி போல் கும்முன்னு இருந்த நடிகை முதல் படத்திலேயே டாப் ஹீரோக்களுடன் நடித்தார். அதன் பிறகு அவருக்கான வாய்ப்புகளும் வரிசை கட்டியது. ஆனால் நடிகையின் கெட்ட நேரமோ என்னமோ தெரியவில்லை மூன்றெழுத்து இயக்குனரின் பார்வையில் விழுந்தார். ஆரம்பத்தில் இருந்த நட்பு போக போக நெருக்கமானது. இயக்குனரும் நடிகையை தன் தேவைகளுக்கு பயன்படுத்தியிருக்கிறார். நடிகை சம்பாதித்த சொத்துக்களையும் ஆட்டையை போட்டு இருக்கிறார். ஆரம்பத்தில் இயக்குனரை நம்பி மொத்தத்தையும் இழந்த நடிகை பின்பு சுதாரித்து இருக்கிறார். ஆனால் அதற்கான […]

வாழ்வியல்

கண்பார்வையை கூர்மையாக்கும் உணவுகள்

  • February 5, 2025
  • 0 Comments

இன்றைய காலகட்டத்தில், பலருக்கு சிறு வயதிலேயே, கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு, கண்ணாடி அணிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. டிஜிட்டல் உபகரணங்களின் அதிக அளவிலான பயன்பாடு காரணமாக, சிறு வயதிலேயே கண் பார்வை குறைவதுடன், கண்கள் தொடர்பான பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. வயது ஏற ஏற கண்பார்வை குறைவது ஒரு பொதுவான பிரச்சனை. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில், டிஜிட்டல் இயக்கத்தில், குழந்தைகள் கூட சிறு வயதிலிருந்தே தடிமனான கண்ணாடியை அணிகிறார்கள். நம் உடலின் […]

உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்

  • February 5, 2025
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் மாற்றமடைந்துள்ளது. அதற்கமைய, விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.59 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.20 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.21 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவிலும் DeepSeak செயலிக்கு தடை

  • February 5, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து அரசு சாதனங்கள் மற்றும் அமைப்புகளிலிருந்தும் DeepSeak செயலி தடை செய்யப்பட்டுள்ளது. சீனாவில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு அரட்டை பலகை பயன்பாடான DeepSeek, நிலையான தேடுபொறிகள் மூலம் அணுக முடியாத வலைத்தளங்களை அணுக முடியும். இந்த டீப்சீக் செயலி மூலம் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் துப்பாக்கி பரிவர்த்தனைகள், ஆபாசம், சூதாட்டம், செய்தி வலைத்தளங்கள் மற்றும் மோசடி மற்றும் ஊழல் பற்றிய தகவல்களையும், தனிப்பட்ட தகவல்களையும் நீங்கள் காணலாம். நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு […]

இலங்கை செய்தி

இலங்கை காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

  • February 5, 2025
  • 0 Comments

ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

செய்தி

விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு முன்னாள் இங்கிலாந்து வீரர் ஆதரவு!

  • February 5, 2025
  • 0 Comments

விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் ரோபோக்கள் அல்ல என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பேசியுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. இந்தத் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். […]

error: Content is protected !!