இலங்கை செய்தி

இலங்கை காலநிலையில் மாற்றம் – நுவரெலியாவில் உறைபனி பெய்ய வாய்ப்பு

  • February 8, 2025
  • 0 Comments

இலங்கையின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்று தொடங்கி அடுத்த சில நாட்களில் அதிகாலை நேரங்களில் நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் உறைபனி பெய்ய வாய்ப்புள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கை வரும் இறக்குமதி வாகனங்களைத் தாங்கிய கப்பல் – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • February 8, 2025
  • 0 Comments

இலங்கையில் வாகன இறக்குமதி தளர்த்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 25ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களைத் தாங்கிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் சகல வாகனங்களும் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார். அத்துடன் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் வாகனமொன்றின் விலை 5,500,000 முதல் 6,000,000 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் காணப்படும் எனவும் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

ஏ.ஐ தொழில்நுட்பத்தில் சிறந்த 10 நாடுகள்

  • February 8, 2025
  • 0 Comments

உலகளாவிய AI தொழில்நுட்ப தரவரிசை: செயற்கை நுண்ணறிவு (AI) இன்று உலகை கணிசமாக மாற்றி வருகிறது, சமீபத்திய முன்னேற்றங்கள் பொருளாதாரங்கள், வேலை சந்தைகள் மற்றும் சமூக இயக்கவியல் ஆகியவற்றில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கின்றன. Grand View Research மற்றும் Statista Market Insights ஆய்வின் படி AI சந்தை 36.6 % கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்திலும் (CAGR) 2025 ஆம் ஆண்டில் இது 243.70 பில்லியன் மதிப்பை எட்டக்கூடும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஸ்டான்ஃபோர்டின் […]

விளையாட்டு

2வது போட்டியில் களமிறங்கும் விராட் கோலி! தொடரை கைப்பற்றுமா இந்தியா?

  • February 8, 2025
  • 0 Comments

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே, முதல் ஒரு நாள் போட்டி பிப்ரவரி 6-ஆம் திகதி நடைபெற்ற நிலையில்,அதில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. எனவே, இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கிறது என்பதால் ஒரு போட்டியில் வெற்றிபெற்றால் கூட தொடரை கைப்பற்றிவிடும். இதனை கருத்தில்கொண்டு தான் இந்திய வீரர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் இரண்டாவது […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் படையினரால் முட்கம்பி வேலி அமைக்கும் பணி தீவிரம்

  • February 8, 2025
  • 0 Comments

அமெரிக்கா-மெக்சிகோ முட்கம்பி வேலி அமைக்கும் பணியில் அமெரிக்க மரைன்ஸ் படையினர் ஈடுபட்டுள்ளனர். எல்லையில் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துஜிவானா என்ற இடத்தில் உள்ள சான் சிட்ரோ நுழைவுப் பகுதி வழியே மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் செல்லும் வாகனங்களை தீவிர சோதனைக்குப் பிறகு அதிகாரிகள் அனுமதித்து வருகின்றனர். சட்டவிரோத ஊடுருவல் மற்றும் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க 10 ஆயிரம் பாதுகாப்புப் படையினரை எல்லையில் பணியமர்த்த மெக்சிகோ ஒப்புக்கொண்டதை அடுத்து […]

செய்தி வட அமெரிக்கா

கனடா சென்ற 20000 இந்திய மாணவர்கள் மாயம் – எங்கிருக்கிறார்கள் என்ற தகவலே இல்ல

  • February 8, 2025
  • 0 Comments

கனடா சென்ற 20000 இந்திய மாணவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவலே தெரியாமல் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவிலிருந்து கனடாவுக்கு மாணவர்கள் விசாவில் சென்று, ஆனால் இதுவரை எந்த கல்லூரியிலும் சேராமல், இவர்கள் காணாமல் போயுள்ளனர். அண்மையில் வெளியான தரவுகளின்படி, உயர்கல்விக்காக, இந்தியாவிலிருந்து கனடா சென்ற 20000 மாணவர்கள், எந்தக் கல்லூரியிலும் சேரவில்லை என்றும், அவர்களைப் பற்றிய எந்த தகவலும் அரசிடம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணாமல் போன மாணவர்களின் பின்னணி பற்றி வெளியாகும் தகவல்களில் பல […]

செய்தி

சிங்கப்பூர் விமானத்தில் திடீரென கத்திய பயணியால் ஏற்பட்ட பரபரப்பு

  • February 8, 2025
  • 0 Comments

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஊழியர்களிடம் மோசமாக நடந்துகொண்ட பயணி விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் தைவானிலிருந்து ஷங்ஹாய் நகருக்கான பயணம் சுமார் 2 மணி நேரம் தாமதமடைந்ததாகத் தெரிகிறது. குறித்த பயணியின் செயல் சமூக ஊடகத்தில் காணொளியாகப் பகிரப்பட்டது. விமானம் ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்தபோது பயணி கழிப்பறைக்குச் செல்லவேண்டும் என்று ஊழியரிடம் கூறியுள்ளார். அவர் கதவைத் தட்டி, ஊழியர்களை திட்டிக் கூச்சலிட்டுள்ளார். அருகே இருக்கும் சக பயணிகள் நடப்பதைக் கண்டு அதிருப்தி தெரிவிக்கின்றனர். அமைதி காத்த விமான ஊழியர்கள் பின்னர் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கை மக்களுக்காக அரசாங்கம் எடுத்த நடவடிக்கை – அலைச்சலும் அழுத்தமும் குறையும்

  • February 8, 2025
  • 0 Comments

இலங்கையில் டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தின் ஊடாக மூன்று பிரதான டிஜிட்டல் வசதிகள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய, அரச டிஜிட்டல் கொடுப்பனவு தளமொன்றை உருவாக்குதல் (GovPay)ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்திற்கு கொண்டுச் செல்லல், தூதரகங்களிலிருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு (eBMD) சான்றிதழ்களை மென்பொருள் மூலம் பெற்றுக் கொள்ளல் என்பன மேற்கொள்ளப்படும். டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, ICTA நிறுவனம் மற்றும் லங்கா பே (Lanka Pay) […]

செய்தி தென் அமெரிக்கா

பிரேசிலில் சிறிய விமானம் விபத்துக்குள்ளாகி பேருந்தில் மோதியதில் 2 பேர் பலி

  • February 7, 2025
  • 0 Comments

பிரேசிலின் பொருளாதாரத் தலைநகரான சாவ் பாலோவில் உள்ள ஒரு பெரிய அவென்யூவில் ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். நகரின் மேற்குப் பகுதியில், நகர மையத்திற்கு அருகில் உள்ள பார்ரா ஃபண்டா பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தின் ஒரு பகுதி ஒரு பேருந்தில் மோதியதில், உள்ளே இருந்த ஒரு பெண் காயமடைந்தார், அதே நேரத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றொரு இடிபாடுகளால் தாக்கப்பட்டார் என்று தீயணைப்பு வீரர்கள் அறிக்கை தெரிவித்தனர். இருவரும் மருத்துவ சிகிச்சை […]

ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

அடுத்து விடுவிக்கப்படும் பணயக்கைதிகளின் பெயர்களை வெளியிட்ட ஹமாஸ்

  • February 7, 2025
  • 0 Comments

இஸ்ரேலால் பிடிக்கப்பட்ட பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக அடுத்து காசாவில் விடுவிக்கப்படும் பணயக்கைதிகளின் பெயர்களை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. 52 வயது எலி ஷராபி, 56 வயது ஓஹத் பென் அமி மற்றும் 34 வயது ஓர் லெவி. இவர்கள் மூவரும் பொதுமக்கள் ஆவர். ஜனவரி 19 அன்று போர் நிறுத்தம் தொடங்கியதிலிருந்து பதினெட்டு பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். பதிலுக்கு இஸ்ரேல் 383 கைதிகளை விடுவித்துள்ளது. அடுத்து மேலும் 183 பேர் விடுவிக்கப்படுவார்கள் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. மூன்று வாரங்களில் போர் […]

error: Content is protected !!