ஆசியா

கடன் பிரச்சனை காரணமாக ஏலம் விடப்படும் பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம்

  • September 25, 2024
  • 0 Comments

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தை வரும் அக். 1ம் திகதி ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நஷ்டத்தை ஈடுகட்ட 51% முதல் 100% விமான நிறுவனங்களை விற்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவன ஏலம் அக்டோபர் 1 ஆம் திகதி நடைபெறும் என்று தேசிய சட்டமன்ற தனியார் மயமாக்கல் குழுவின் தலைவர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். மேலும், “பாகிஸ்தான் சர்வதேச விமான நிவறுனம் ஏலம் அடுத்த மாதம் முதல் தேதி இறுதி செய்யப்படும்” […]

உலகம்

லெபனானில் நேரலையில் பேசிக் கொண்டிருந்தபோதே ஊடகவியலாளர் வீட்டில் பாய்ந்த இஸ்ரேலிய ஏவுகணை..!

  • September 25, 2024
  • 0 Comments

லெபனான் நாட்டு ஊடகவியலாளர் ஒருவர், தொலைக்காட்சி நேரலையில் இருந்தபோது, இஸ்ரேலிய ஏவுகணை ஒன்று அவரது வீட்டைத் தாக்கியதில் அவர் காயமடைந்தார். இந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இஸ்ரேல் – காஸா இடையேயான போரில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். குறிப்பாக, ஈரான் ஆதரவுகொண்ட ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேலும் பதிலடி […]

பொழுதுபோக்கு

ஜீவா, பிரியா பவானி சங்கரை சுற்றி நடக்கும் மர்மம்… பல திருப்பங்களுடன் “BLACK” Trailer

  • September 25, 2024
  • 0 Comments

கே.ஜி. பாலசுப்ரமணி இயக்கத்தில் ஜீவாவுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் பிளாக் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. புதிதாக கட்டப்பட்டிருக்கும் அந்த வில்லாவில் முதல் கஸ்டமராக நுழையும் இவர்களுக்கு பல மர்மமான சம்பவங்கள் நடக்கிறது. பெரும் ஆபத்தில் இருக்கும் இவர்களால் எந்த உதவியும் பெற முடியவில்லை. எப்படியும் அங்கிருந்து தப்பித்து விட போராடும் ஜீவா, திடீரென காணாமல் போகும் பிரியா பவானி சங்கர் என ட்ரெய்லர் விறுவிறுப்பாக நகர்கிறது. இறுதியில் சந்தேக […]

மத்திய கிழக்கு

ஹிஸ்புல்லா தளபதிகளை கொல்வதால் குழுவை தோற்கடிக்க முடியாது : ஈரான் எச்சரிக்கை

  • September 25, 2024
  • 0 Comments

லெபனான் முழுவதும் பேரழிவுகரமான வான்வழித் தாக்குதல்களின் நாட்களில் ஈரான் ஆதரவு இயக்கத்தின் மூத்த நபர்களை இஸ்ரேல் தாக்கிய பின்னர், ஹெஸ்பொல்லா தளபதிகளைக் கொல்வது குழுவை மண்டியிடாது என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். “ஹிஸ்புல்லாவின் நிறுவன பலம் மற்றும் மனித வளம் மிகவும் வலுவானது மற்றும் ஒரு மூத்த தளபதியின் கொலையால் விமர்சன ரீதியாக பாதிக்கப்படாது, அது தெளிவாக இழப்பாக இருந்தாலும் கூட,” என்று கமேனி கூறியுள்ளார். லெபனானின் சுகாதார மந்திரியின் கூற்றுப்படி, […]

இலங்கை

பிரிவினை யுகத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வருவோம் – இலங்கை ஜனாதிபதி!

  • September 25, 2024
  • 0 Comments

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) உடனடியாக பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து, நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று தெரிவித்தார். நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு, அரசாங்கம் சம்பந்தப்பட்ட கடனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, செயல்முறையை விரைவுபடுத்தவும் தேவையான கடன் நிவாரணத்தைப் பெறவும் செய்யும் என்றார். இந்த நாட்டு மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற முடியும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம், […]

முக்கிய செய்திகள்

இலங்கை : நாட்டு மக்களுக்கு புதிய ஜனாதிபதி அநுரவின் விசேட உரை

  • September 25, 2024
  • 0 Comments

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுகின்றார். ஜனாதிபதியானதன் பின்னர் பொதுமக்களுக்கு அவர் ஆற்றும் முதலாவது விசேட உரை இதுவாகும்.

இலங்கை

இலங்கை : ஏற்றத்துடன் பயணிக்கும் கொழும்பு பங்கு சந்தை!

  • September 25, 2024
  • 0 Comments

கொழும்பு பங்குச் சந்தை விலைச் சுட்டெண்கள் இன்று (25) கணிசமான உயர்வைக் காட்டியுள்ளன. அனைத்துப் பங்கு விலைக் குறியீடும் 325.59 புள்ளிகள் அல்லது 2.87% பெரிய அதிகரிப்பைப் பதிவு செய்தது. மேலும், S&P SL20 சுட்டெண் இன்று 148.54 புள்ளிகளால் உயர்ந்துள்ளது, இது முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் 4.59% மிகப்பெரிய வளர்ச்சியாகும். அதன்படி, நாளின் பரிவர்த்தனைகளின் முடிவில், அனைத்து பங்கு விலை குறியீட்டு மதிப்புகள் 11,659.71 அலகுகளாகவும், S&P SL20 குறியீட்டு மதிப்புகள் 3,383.76 அலகுகளாகவும் பதிவு […]

மத்திய கிழக்கு

லெபனானில் மூன்றாவது நாளாக தொடரும் தாக்குதல்: டெல்அவிவ் நகரில் அபாய ஒலி

  • September 25, 2024
  • 0 Comments

தெற்கு லெபனானில் உள்ள கிராமங்களை இஸ்ரேலின் போர் விமானங்கள் மூன்றாவது நாளாகச் சூழ்ந்ததாக லெபனான் ஊடகங்கள் புதன்கிழமை (செப்டம்பர் 25) கூறின.அதேநேரம், தனது டெல் அவிவ் நகரில் விடியற்காலை அபாய ஒலிகளைத் தொடர்ந்து ஏவப்பட்ட ஏவுகணையை இடைமறித்ததாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இஸ்ரேலிய ராணுவத்துக்கும் இடையில் நடைபெறும் சண்டையிலிருந்து தப்பிக்க இந்த வாரம் தெற்கு லெபனானில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி ஓடிவிட்டதாக லெபனான் அதிகாரிகள் கூறினர். அதேநேரம், உள்ளூர் […]

இலங்கை

இலங்கை: பொதுத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு! தேர்தல்கள் ஆணைக்குழு

  • September 25, 2024
  • 0 Comments

அங்கீகரிக்கப்பட்ட 84 அரசியல் கட்சிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதுதவிர, சுயேட்சை குழுக்கள் சார்பிலும் வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், ஒரு கட்சியின் சார்பில் மாவட்ட ரீதியில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் எண்ணிக்கை தொடர்பில், எதிர்வரும் நாட்களில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும். விகிதாசார முறைமையூடாக பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ […]

ஐரோப்பா

லெபனானில் உள்ள பிரித்தானியர்களை வெளியேறுமாறு உத்தரவு!

  • September 25, 2024
  • 0 Comments

அவசரகால வெளியேற்றம் தேவைப்படும் பட்சத்தில், சைப்ரஸில் சுமார் 700 இங்கிலாந்து துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், லெபனானில் உள்ள பிரிட்டன்களை “உடனடியாக வெளியேறுங்கள்” என்று பிரதமர் கூறியுள்ளார். இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொல்லாவுக்கும் இடையேயான முழுப் போர் பற்றிய அச்சம் அதிகரித்து வரும் நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இங்கிலாந்தின் அவசரகால கோப்ரா குழுவின் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி, அனைத்து பிரித்தானியர்களும் “இப்போது” லெபனானை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!