இலங்கை

இலங்கை பொதுப் போக்குவரத்திற்கான இ-டிக்கெட் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ரயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான மின்னணு டிக்கெட் (இ-டிக்கெட்) முறை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும். போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்கவினால் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவில் (PMD) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

ஆசியா

சீனாவுக்கு எதிர்ப்பை உணர்த்த கைகோர்த்துள்ள பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான்

  • July 8, 2024
  • 0 Comments

சீனாவுக்கு எதிர்ப்பை உணர்த்தும் விதமாக பிலிப்பைன்சும் ஜப்பானும் வரலாற்றுபூர்வ பாதுகாப்பு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டு உள்ளன.இரு நாடுகளும் ஒன்று மற்றொன்றின் எல்லைக்குள் இணைந்து பயிற்சி நடத்த அந்த உடன்பாடு அனுமதிக்கும். அதுபோன்ற பயிற்சி நிகழ இருப்பது முதன்முறை. கிழக்கு மற்றும் தெற்கு சீனக் கடல் விவகாரத்தில் சீனாவின் ஆதிக்க செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு ஏதுவாக இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வளர்க்க இப்பயிற்சி உதவும் எனக் கருதப்படுகிறது. மணிலாவில் திங்கட்கிழமை (ஜூலை 8) நடைபெற்ற பரஸ்பர ஈடுபாட்டு உடன்பாட்டில் […]

ஐரோப்பா

பிரித்தானியாவின் பல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!

  • July 8, 2024
  • 0 Comments

பிரித்தானியாவின் பல பகுதிகளில் இன்று (08.07) மாலை முதல் கனமழை பெய்யும் என மெட் ஆப்பிஸ் எதிர்வுக்கூறியுள்ளது. ஹாம்ப்ஷயர், ஆக்ஸ்போர்ட்ஷையர், க்ளூசெஸ்டர்ஷைர், கார்டிஃப், டெவோன் மற்றும் கார்ன்வால் உள்ளிட்ட தெற்கு இங்கிலாந்து மற்றும் சவுத் வேல்ஸ் பகுதிகளில் மழைக்கான மஞ்சள் வானிலை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று (08.07) மாலை முதல் நாளை பிற்பகல் வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பொழுதுபோக்கு

ஆரவாரமாக வெளிவந்தது வணங்கான் ட்ரெய்லர்… இதோ

  • July 8, 2024
  • 0 Comments

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலா இயக்கத்தில் வணங்கான் உருவாகி இருக்கிறது. சூர்யாவுக்கு பதில் நடிக்க வந்த அருண் விஜய் இப்படத்திற்காக கடுமையாக உழைத்தார். பொதுவாக பாலா தன் பட ஹீரோக்களை சக்கையாக பிழிந்து விடுவார். அருண் விஜய் இயல்பாகவே ரிஸ்க்கான காட்சிகளில் அலட்டிக்காமல் நடிப்பவர். அதன்படி வணங்கானில் அவர் தன் மொத்த திறமையையும் இறக்கி இருக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் டீசர் ரசிகர்களை இம்ப்ரஸ் செய்திருந்தது. இந்த சூழலில் இன்று மாலை வணங்கான் ட்ரெய்லர் ஆரவாரமாக வெளிவந்துள்ளது.

ஐரோப்பா

இஸ்ரேலிய காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட மூன்று பாலஸ்தீனியர்கள் பலி

இஸ்ரேலிய காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட மூன்று பாலஸ்தீனியர்களின் கைவிலங்கு செய்யப்பட்ட உடல்கள் காஸாவின் இஸ்ரேலுடனான எல்லைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளன, மேலும் அவர்களில் ஒருவரின் மாமாவும் சாட்சியும் அவர்கள் விடுவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இஸ்ரேலியப் படைகளால் தாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். “மற்ற இரண்டு பாலஸ்தீனியர் தரையில் விடப்பட்டதை நான் கண்டேன். அவர்கள் ஆடையின்றி இருந்தனர், மேலும் அவர்களது கைகளில் இஸ்ரேலிய இராணுவத்தால் பிளாஸ்டிக் கஃப்கள் போடப்பட்டிருந்தன” என்று கபாயென் கூறியுள்ளார்.

ஐரோப்பா

ரஷ்யா, உக்ரைன் நேரடி பேச்சுவார்த்தைக்கு உதவ உலக நாடுகளுக்கு சீனா அதிபர் அழைப்பு

சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஆர்பன் திங்கள்கிழமை பெய்ஜிங்க்கு விஜயம் செய்துள்ளார். “பிரதமர் விக்டர் ஓர்பனின் அமைதிப் பணி தொடர்கிறது” என்று பெர்டலான் ஹவாசி மேற்கோள் காட்டினார். ஜூலை தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழலும் தலைமைப் பதவியை ஹங்கேரி ஏற்றுக்கொண்டதிலிருந்து ஆர்பனின் மூன்றாவது ஆச்சரியமான வெளிநாட்டுப் பயணம் இதுவாகும், அவர் கடந்த வாரம் உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு பயணம் செய்தார். குறித்த விஜயத்தின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங் […]

ஐரோப்பா

பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கு பெருமை சேர்ந்த சிறுமி – பிரமிக்கும் வெளிநாட்டவர்கள்

  • July 8, 2024
  • 0 Comments

சர்வதேச செஸ் ஒலிம்பிக்போட்டியில் பிரித்தானியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹாரோவைச் சேர்ந்த ஒன்பது வயதுச் சிறுமி, தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார். செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான மகளிர் அணியில் போத்தனா சிவானந்தன் இடம்பிடித்துள்ளார். 2015 இல் பிறந்த போதனா, கொரோனா காலத்தில் செஸ் விளையாட ஆரம்பித்ததாக தெரிவித்துள்ளார். ஒரு வருடத்திற்குள், ரேபிட் மற்றும் பிளிட்ஸ் ஐரோப்பிய எட்டு வயதுக்குட்பட்ட போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றார். இந்த ஆண்டு, 10 வயதுக்குட்பட்ட உலகின் மிக […]

இலங்கை

இலங்கையில் நீர்த் தொட்டியில் விழுந்து 3 வயது குழந்தை பரிதாபமாக பலி!

  • July 8, 2024
  • 0 Comments

மீத்தெனிய பிரதேசத்தில் மூன்று வயதுடைய குழந்தையொன்று வீட்டின் நீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ளது. உயிரிழந்த குழந்தையின் தாய் தனது ஒன்பது வயது குழந்தையையும், உயிரிழந்த மூன்று வயது குழந்தையையும் குளிக்க வைப்பதற்காக வீட்டிற்கு வெளியே உள்ள நீர் தொட்டி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் . அங்கு ஒன்பது வயது குழந்தையை குளிக்க செய்துவிட்டு வீட்டினுள்ளே அழைத்து சென்ற தாய் மூன்று வயது குழந்தையை நீர் தொட்டிக்கு அருகில் அமர் வைத்து சென்றுள்ளார். வெளியே வந்த தாய் […]

உலகம்

இஸ்‌ரேல் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடதிய ஹிஸ்புல்லா

  • July 8, 2024
  • 0 Comments

ஈரானின் ஆதரவுடன் லெபனானைத் தளமாகக் கொண்டு இஸ்‌ரேலுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா போராளி அமைப்பு, ஜூலை 7ஆம் திகதியன்று இஸ்‌ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்‌ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலான் ஹைட்ஸ் பகுதியில் இருக்கும் மவுண்ட் ஹெர்மனைக் குறிவைத்து ஆளில்லா வானூர்தி மூலம் தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு கூறியது. மவுண்ட் ஹெர்மனில் இஸ்‌ரேலுக்குச் சொந்தமான முக்கிய கண்காணிப்பு நிலையம் உள்ளது. காஸா போர் முடிவுக்கு வந்தால் மட்டுமே இஸ்‌ரேலுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்று […]

இலங்கை

இலங்கை அதுருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: போலீசார் வெளியிட்ட புதிய தகவல்

இன்று காலை அதுருகிரிய துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் கடுவெல கொரதொட்ட பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துருகிரிய, ஒருவல சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 55 வயதான சுரேந்திர வசந்த பெரேரா எனப்படும் கிளப் வசந்தா உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன், பாடகர் கே.சுஜீவா உட்பட நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடகர் சுஜீவா மற்றும் மற்றுமொரு ஆண் தற்போது கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், காயமடைந்த இரு பெண்கள் ஹோமாகம […]