ஆசியா

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இரு தனி நாடுகளை உருவாக்குவதே ஒரே தீர்வு : பிரித்தானியா

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இரு தனி நாடுகளை உருவாக்குவதே ஒரே தீர்வு என பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். இந்த யோசனையை இஸ்ரேலின் பிரதம மந்திரி நிராகரித்தது “ஏமாற்றம்” என்று கிராண்ட் ஷாப்ஸ் கூறியுள்ளார். மேலும் பெஞ்சமின் நெதன்யாகுவின் நிலைப்பாடு “ஆச்சரியம்” அல்ல என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், பாலஸ்தீனியர்கள் இறையாண்மை கொண்ட அரசிற்கு “தகுதியானவர்கள்” என்று கூறிய ஷாப்ஸ், “இன்னொரு தீர்வு இருப்பதை நான் உண்மையில் காணவில்லை” என்றும் கூறியுள்ளார்.

இலங்கை

இலங்கை : வாக்காளர் இடாப்பில் பதியப்படாத இளைஞர்கள்!

  • January 21, 2024
  • 0 Comments

18 வயது பூர்த்தியடைந்த 100,000 இளைஞர்கள் குழு வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்படவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம்  சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2023 வாக்காளர் பட்டியல் தயாரிப்பின் போது இது தெரியவந்துள்ளது. அதன்படி, 2023ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் இளம் வாக்காளர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும் என அவர் கூறியுள்ளார். இவ்வறுடத்தின் இறுதி பகுதியில் தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசியா

இந்திய விமானத்தை பயன்படுத்த அனுமதி மறுப்பு…பரிதாபமாக சிறுவன் உயிரிழப்பு!

  • January 21, 2024
  • 0 Comments

மாலத்தீவு புதிய அதிபராக முகமது முய்சு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மாலத்தீவில் இந்திய படை வீரர்கள் 88 பேர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை மார்ச் 15ம் திகதிக்குள் திரும்பப்பெறும்படி இந்தியாவுக்கு மாலத்தீவு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.அதேவேளை, மாலத்தீவுக்கு டிரோனியர் ரக விமானத்தையும் இந்தியா வழங்கியுள்ளது. இந்த விமானத்தை இந்திய வீரர்கள் இயக்கி வருகின்றனர். மாலத்தீவில் மருத்துவ மற்றும் பிற பயன்பாட்டிற்காக இந்த விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், […]

இலங்கை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் தெரிவு: சுமந்திரனுக்கு எதிராக கோஷமிட்ட தமிழ் இளைஞர்கள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் 47 மேலதிக வாக்குகளால் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பொதுச்சபைக் கூட்டம் இன்று தமிழர் தலைநகர் திருகோணமலையில் இடம்பெற்றது. மும்முனை போட்டி தமிழரசுக் கட்சி வரலாற்றில் முதற்தடவையாக தலைவர் தேர்வு மூவருக்கிடையிலான போட்டியாக அமைவதால் இன்றைய கூட்டம் முக்கியம் வாய்ந்ததாக தமிழ் அரசியற் தரப்பில் அனைவர் மத்தியிலும் பார்க்கப்பட்டது. அந்த அடிப்படையில் பாராளுமன்ற […]

உலகம்

ஆப்கானிஸ்தானின் மலைப் பகுதியில் விபத்திற்குள்ளான விமானம்!

  • January 21, 2024
  • 0 Comments

வடகிழக்கு ஆப்கானிஸ்தானின் மலைப் பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்துக்குள்ளான விமானத்தில் 6 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானம் விபத்துக்குள்ளான இடம் இன்னும் துல்லியமாக வெளியிடப்படவில்லை மற்றும் அருகிலுள்ள பகுதிகளுக்கு நிவாரண சேவை குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து மாஸ்கோ நோக்கி வந்து கொண்டிருந்த இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதாக ரஷ்யா அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, விபத்துக்குள்ளான விமானம் இந்தியாவிற்கு சொந்தமானது என முன்னர் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், […]

இலங்கை

தென்னிந்திய திரைப்பட நடிகைகள் பலர் மலையகத்திற்கு விஜயம்!

  • January 21, 2024
  • 0 Comments

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகள் பலர் இன்று (21.01) ஹட்டனுக்கு விஜயம் செய்திருந்தனர். ஹட்டன் டன்பார் விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய தைப் பொங்கல் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே அவர்கள் விஜயம் செய்திருந்தனர். பிரபல நடிகைகளான ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா, சன்யுக்தா மற்றும் மீனாச்சி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். அமைச்சர்களான விதுர விக்கிரமநாயக்க மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இந்த தேசிய தைப் பொங்கல் நாளில், தமிழ் மக்கள்  1008 […]

ஐரோப்பா

விரைவில் வட கொரியாவிற்கு விஜயம் செய்யும் விளாடிமிர் புடின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விரைவில் பியோங்யாங்கிற்குச் செல்வதற்கான தனது விருப்பத்தைக் தெரிவித்துள்ளதாக வட கொரியாவின் அரச ஊடகமானமொன்று தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ரஷ்யாவுக்கு விஜயம் செய்த வடகொரிய வெளியுறவு அமைச்சர் சோ சோன் ஹுய்யை சந்தித்தபோது, ​​வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் வருகைக்கு அழைப்பு விடுத்ததற்கும் புடின் நன்றி தெரிவித்தார் என்று வெளியுறவு அமைச்சக அதிகாரியை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக வடகொரியாவுக்கு ரஷ்யத் தலைவரின் முதல் பயணம் இதுவாகும். கிம்ளின் செய்தித் […]

பொழுதுபோக்கு

ஜெயிலர் – 2 ரெடி…. வெறித்தனமான அப்டேட் இதோ…

  • January 21, 2024
  • 0 Comments

ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆண்டு வெளிவந்து ஹிட் ஆனது. ரஜினியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது. உலகளவில் ரூ. 635 கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில், சன் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 200 கோடி வரை லாபம் கிடைத்திருக்கும் என்கின்றனர். இதுவரை இவ்வளவு பெரிய லாபம் படங்களில் இருந்து சன் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்தது இல்லை என்றும் கூறப்படுகிறது. மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். இப்படம் […]

இலங்கை

அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை : விவசாய அமைச்சர்

தேவையான அளவு அரிசியை நாட்டிற்குள்ளேயே உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என அமரவீர தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்யும் வகையில், நாட்டிற்குள் அதிகளவு அரிசியை உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். “2022 ஆம் ஆண்டில், நாட்டின் அரிசி தேவையில் மூன்றில் ஒரு […]

இலங்கை

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம் : பிரித்தானிய நீதிமன்றத்தை நாட இலங்கை அரசு நடவடிக்கை!

  • January 21, 2024
  • 0 Comments

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீ விபத்து மற்றும் மூழ்கியதால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக எதிர்வரும் 29ஆம் திகதி பிரித்தானிய அட்மிரல்டி உயர்நீதிமன்றத்தில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. கப்பலின் நிறுவனத்திடம் இருந்து பெறக்கூடிய இழப்பீட்டுத் தொகையை 19.5 மில்லியன் பவுண்ட்ஸ் ஸ்ரேலிங்காக நீதிமன்றம் முன்னர் மட்டுப்படுத்தியிருந்ததாக திணைக்களம் குறிப்பிடுகிறது. அதன் மூலம் கப்பல் விபத்தால் ஏற்பட்ட சேதத்திற்கு போதிய இழப்பீடு தொகையை வசூலிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதேவேளை, […]

error: Content is protected !!