யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பதிவான நெகிழ்ச்சியான தருணம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் வாழ் நாள் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில், ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தைச் சேர்ந்த திசாநாயக முதியன்சேலாகே ஹஷான் சகார திசாநாயக என்பவருக்கு ஏகாந்த நிலையில் அவரது தாயாரிடம் பட்டம் கையளிக்கப்பட்டது. பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் விஞ்ஞானமாணிப் பட்டத்துக்கு உரியவராக்கப்பட்ட பின்னர் அவர் உயிருடன் இல்லாததால், இன்று இடம்பெற்ற 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவில் ஏகாந்த நிலையில் அவரது தாயாரிடம் பட்டம் கையளிக்கப்பட்டது. […]













