இலங்கை

யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பதிவான நெகிழ்ச்சியான தருணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் வாழ் நாள் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில், ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தைச் சேர்ந்த திசாநாயக முதியன்சேலாகே ஹஷான் சகார திசாநாயக என்பவருக்கு ஏகாந்த நிலையில் அவரது தாயாரிடம் பட்டம் கையளிக்கப்பட்டது. பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் விஞ்ஞானமாணிப் பட்டத்துக்கு உரியவராக்கப்பட்ட பின்னர் அவர் உயிருடன் இல்லாததால், இன்று இடம்பெற்ற 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவில் ஏகாந்த நிலையில் அவரது தாயாரிடம் பட்டம் கையளிக்கப்பட்டது. […]

இலங்கை

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி புறப்பட்ட ரயில்… மாட்டுடன் மோதி விபத்து

  • July 20, 2023
  • 0 Comments

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கடுகதி புகையிரதம் தாண்டிக்குளம் பகுதியில் நேற்று (19) மாலை மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது. கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற புகையிரதம் தாண்டிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மாட்டுடன் மோதுண்டது. இதன் போது மாடு பலியான நிலையில் புகையிரதத்தின் இயந்திரப்பகுதியில் விபத்தினால் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகையிரதம் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை மீள் இயங்க வைப்பதற்கு பலவகையிலும் புகையிரத ஊழியர்கள் முயற்சித்த போதிலும் அது சாத்தியப்படாத நிலையில் […]

இலங்கை

சமையல் எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு!

  • July 20, 2023
  • 0 Comments

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் 15 பில்லியன் ரூபாயை திறைசேரிக்கு வழங்கியுள்ளதாக லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் தனது தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் ஊடாக திறைசேரிக்கு 15 பில்லியன் ஈவுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது என பீரிஸ் தெரிவித்தார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள முதித பீரிஸ் ‘எமது தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக இன்று திறைசேரிக்கு 150 கோடிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக சிலிண்டரில் 1.5 […]

இந்தியா

சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து விசாரித்த பிரதமர் மோடி

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று காந்தியின் உடல்நிலை குறித்து பிரதமர் கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சென்ற விமானம் போபாலில் உள்ள ராஜா போஜ் விமான நிலையத்தில் கடந்த 18ம் திகதி இரவு அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ராகுல் காந்தி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சோனியா காந்தி ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்து காணப்பட்டுள்ளார். அதன் தலைப்பில் கருணை வடிவம் அழுத்தமாக உள்ளது அம்மா என்று […]

இலங்கை

ஒவ்வாமை காரணமாக உயிரிழந்தவரின் மகளின் கண்ணீர் பதிவு!

  • July 20, 2023
  • 0 Comments

கேகாலை பொது வைத்தியசாலையில் நுண்ணுயிர் எதிர்ப்பியை உட்கொண்ட நபர் ஒருவர் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளார். அஜித் விஜேசிங்க 57 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில், உயிரிழந்தவரின் மகள் கூறுகையில், “அப்பாவின் வாயில் இரண்டு பக்கமும் காயம். அதனாலேயே மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். கல்லீரல் 60% பாதிக்கப்பட்டிருந்தாலும் நலமாக வாழலாம் என்று வைத்தியர் சொன்னார். 17ம் திகதி காலை அப்பாவை பார்க்க சென்றேன். இன்னும் நலமாக இருந்தார். 8 மணிக்கு ஊசி போட்டார்கள். “மருந்து முடிந்து […]

அரசியல் பொழுதுபோக்கு

அரசியல் கட்சியை ஆரம்பிக்க நாள் குறித்த விஜய்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

  • July 20, 2023
  • 0 Comments

தளபதி விஜய் ஏற்கனவே அரசியல் வருகை குறித்து அறிவிக்கும் விதத்தில், பல்வேறு விஷயங்களை செய்து வரும் நிலையில், விரைவில் அரசியல் துவங்க உள்ளதை அதிகார பூர்வமாக அறிவிக்க நாள் குறித்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் துவங்க பிள்ளையார் சுழியை போட்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், விஜய் மக்கள் இயக்கம் மூலம் போட்டியிட்ட பலர் வெற்றிபெற்றனர். வெற்றி பெற்றவர்களை நேரில் அழைத்து […]

இலங்கை

மின்னுவாங்கொடையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

  • July 20, 2023
  • 0 Comments

மினுவாங்கொடை ஹொரம்பெல்ல பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று இன்று (20) அதிகாலை அப்பகுதிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபரை கைது செய்ய விசேட அதிரடிப்படையினர் சென்ற போது, குறித்த சந்தேகநபர் ​​டி-56 துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போது, விஷேட அதிரடிப் படை அதிகாரிகளும் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ள நிலையில், காயமடைந்த […]

இந்தியா

மகாராஷ்டிராவில் நிலச்சரிவு : 100 பேர் மாயம்!

  • July 20, 2023
  • 0 Comments

மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 100 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களில் 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் கடுமையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்நிலையில்,  நேற்றிரவு ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலாபுர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பழங்குடியினர் வசிக்கும் குக்கிராமங்கள் உள்ளன. இதனால் நிலச்சரிவில் சுமார் 30 குடும்பங்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குறித்த 30 குடும்பங்களைச் சேர்ந்த 225 பேர் நிலச்சரிவில் […]

இந்தியா

மணிப்பூரில் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட பழங்குடி பெண்கள் ;நெஞ்சை பதறவைக்கும் செய்தி

  • July 20, 2023
  • 0 Comments

மணிப்பூரில் குகி பழங்குடி இன பெண்ணை நிர்வாணமாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை பெற்றுத் தரப்படும் என அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் கூறியுள்ளார். மணிப்பூரில் தங்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டுமென மெய்தி இனத்தவர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், குகி இனத்தவர் இதை எதிர்க்கின்றனர்.இரு தரப்புக்கும் இடையே கடந்த மே மாதம் தொடங்கிய கலவரம் இன்று வரை நீடிக்கிறது, இதில் பல கொடுமையான சம்பவங்களை நடக்கிறது. இதுவரை […]

இலங்கை

எரிபொருள் ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கப்படும் – காஞ்சன!

  • July 20, 2023
  • 0 Comments

எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று (20.7) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  இது தொடர்பில் இன்று காலை கூட்டம் ஒன்று நடைபெற்றதாகவும், இந்த கூட்டத்தில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் (CPC) அடுத்த ஆறு மாதங்களுக்கான எரிபொருள் சரக்கு திட்டங்கள் மற்றும் விநியோகம் மீளாய்வு செய்யப்பட்டதாக தெரிவித்தார். இதன்படி, எரிபொருள் இறக்குமதித் திட்டங்கள், சுத்திகரிப்புச் செயற்பாடுகள், சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்துவதற்கான […]

error: Content is protected !!