கர்பிணியின் வயிற்றில் துணி வைத்து தைத்த விவகாரம் குறித்து விசாரணை!
முல்லைத்தீவு வைத்தியசாலையில் கர்பிணிப்பெண் ஒருவரின் வயிற்றில் துணித்துண்டுகளை வைத்து தைத்த விவகாரம் குறித்த வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனது மனைவி பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் வைத்தியசாலையில் சிசேரியன் செய்யப்பட்டதாகவும் அதன் பின்னர் பல நாட்களாக நீடித்த வயிற்றுவலி காரணமாக 12 தடவைகள் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவரது கணவர் குறிப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, அவரது வயிற்றில் துணி துண்டுகள் இருந்த நிலையில் அவரது வயிறு […]













