இலங்கை

குடிபோதையில் நண்பனை மண்வெட்டியால் தாக்கி படுகொலை செய்த நபர்!

  • July 10, 2023
  • 0 Comments

வவுனியா, கல்மடு ஈஸ்வரிபுரம் பகுதியில் தனது நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் ஒருவர் இன்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நண்பர்கள் இருவர் மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.வவுனியா கல்மடு ஈஸ்வரிபுரத்தை சேர்ந்த வேலுசாமி நிஷாந்தன் என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். போதையின் உச்சத்தில் பழைய தகராறு தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சந்தேக […]

இலங்கை

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

கல்வி அமைச்சு 2022 மற்றும் 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான புதுப்பிப்பை வழங்கியுள்ளது. அதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வருடம் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா

அடுக்குமாடிக் குடியிருப்பில் பற்றி எரிந்த தீ; தாய்க்கும் மகனுக்கும் நேர்ந்த கதி!

  • July 10, 2023
  • 0 Comments

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்திலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் பற்றிய தீ, இளம் தாய் ஒருவரையும், அவரது பதின்ம வயது மகனையும் பலிகொண்டுவிட்டது. கடந்த வியாழக்கிழமை, ஜெனீவாவிலுள்ள Lignon என்னுமிடத்தில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் தரைத்தளத்தில் தீப்பற்றியுள்ளது. தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்த நிலையில், கட்டிடத்திலிருந்து வெளியேறுவதற்கான படிக்கட்டுகளில், படுகாயமடைந்த நிலையில் ஒரு 28 வயது பெண்ணும், அவரது மகனான 13 வயது சிறுவனும் கண்டுபிடிக்கப்பட்டனர்.தீயிலிருந்து தப்பி வெளியேற முயலும்போது அவர்கள் […]

இலங்கை

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மன்னாரில் நால்வருக்கு நிரந்தர நியமனம்

  • July 10, 2023
  • 0 Comments

ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 4 பேருக்கு இன்றைய தினம் (10) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் குறித்த நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார். இதன் போது உதவி மாவட்டச் செயலாளர் உள்ளடங்கலாக மாவட்டச் செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் […]

அறிந்திருக்க வேண்டியவை இலங்கை வாழ்வியல்

ஆடி மாத்தில் இரண்டு அமாவாசை.. யாரும் குழம்ப வேண்டாம்..

  • July 10, 2023
  • 0 Comments

ஆடி மாத்திலே இரண்டு அமாவாசை வருகின்றது. இது தொடர்பாக யாருமே குழம்ப தேவையில்லை விளக்கம் தருகிறார் சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள். ஆடி அமாவாசை தொடர்பாக அவர் இன்று (10) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த வருடம் ஆடி மாதத்திலே இரண்டு அமாவாசைகள் வருகின்றது. அதில் எது சரி எது தவறு என்று இரண்டு நிலையில் குழப்பத்தில் உள்ளனர். பஞ்சாங்கம் இரண்டும் ஆடி அமாவாசை என்றே போட்டுள்ளது என்று கூறுகின்றனர். […]

உலகம்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

  • July 10, 2023
  • 0 Comments

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள காம்ப்பெல் விரிகுடாவின் தென்கிழக்கில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதனை தேசிய நில அதிர்வு மையம் உறுதிசெய்துள்ளது. இவ் நிலநடுக்கம் நேற்று இரவு 7.39 மணியளவில் கேம்பல் நகரில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நில அதிர்வு மையம் அறிவிப்பின்படி,கேம்ப்பெல் விரிகுடாவில் இருந்து 162 கி.மீ தொலைவில் தென்கிழக்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறினர்.மேலும் உயிர்சேதம் அல்லது பொருட் சேதங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் […]

இந்தியா

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் தீவிரம்! பக்தர்களுக்காக திறக்கப்பவுள்ள கோயில் சன்னதி

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தற்போது மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அறக்கட்டளை நிர்வாகம் தீர்மானித்துள்ளதன்படி, ஜனவரி 2024 க்குள் ராமர் கோவில் சன்னதி பக்தர்களுக்கு திறக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தொழிலாளர்களின் எண்ணிக்கையை 550 லிருந்து 1,600 ஆக அதிகரித்துள்ளது. 18 மணி நேர ஷிப்ட் முறையில் செய்து வந்த பணி தற்போது இரவு பகலாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான ‘பிரான் பிரதிஷ்டை’ (கும்பாபிஷேகம்) விழாவில் ராமர் சிலை […]

பொழுதுபோக்கு

காருக்குள் 2 மணி நேரம் பாவனா அனுபவித்த மரண வேதனை! திடுக்கிடும் உண்மை

  • July 10, 2023
  • 0 Comments

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என வலம் வந்தவர் நடிகை பாவனா. இளைஞர்களின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்தவர். மேலும், தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், மலையாள நடிகர் திலீப்புக்கும் இன்னொரு நடிகைக்கும் தொடர்பு இருந்ததை நடிகை பாவனா திலீப்பின் மனைவியான மஞ்சுவாரியரிடம் சொல்லிவிட்டார். இதனால் பாவனாவை திலீப் காருக்குள் மோசமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தார். அந்த சம்பவம் அப்போது இந்தியாவையே உலுக்கியது. இதுகுறித்து ஒரு நேர்காணலில் பேசிய பாவனா, “நான் எத்தனையோ நடு […]

இலங்கை ஐரோப்பா

பிரித்தானியாவின் தனித்தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள்!

  • July 10, 2023
  • 0 Comments

பிரித்தானியாவுக்குச் சொந்தமான தீவு ஒன்றில், ஒன்றரையாண்டுகளுக்கும் மேலாக சிறைவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களைக் குறித்த பதறவைக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 2021ம் ஆண்டு, அக்டோபர் மாதம், கனடாவுக்குச் செல்லும் நோக்கில் புறப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பயணித்த படகொன்று நடுக்கடலில் சிக்கித் தவிக்க, பிரித்தானிய கடற்படை அவர்களை மீட்டுள்ளது.ஆனால், அவர்கள் பிரித்தானியாவுக்குக் கொண்டு செல்லப்படாமல், பிரித்தானியாவில் கடல் கடந்த பிரதேசமான Diego Garcia என்னும் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் இந்த சம்பவத்தைக் குறித்த செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தினாலும், […]

அறிவியல் & தொழில்நுட்பம்

நிலவில் 50Km விட்டம் கொண்ட எரிமலை கிரனைட் பாறை கண்டுபிடிப்பு

  • July 10, 2023
  • 0 Comments

நிலவில் புதைந்துள்ள 50கிலோ மீட்டர் விட்டம் கொண்ட பெரிய எரிமலை கிரானைட் பாறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளர். மூன்றரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் வெளியான தீக்குழம்புகள் குளிர்ச்சியடைந்து இந்த பாறை உர்வாகியிருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நிலவின் சுற்றுப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும் செய்ற்கை கோள் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள விஞ்ஞானிகள், சந்திரனின் மேற்பரப்பில் உள்ள மற்ற பாறைகளுடன் ஒப்பிடும்போது , கிரனைட் பாறையில் யுரேனியம், தோரியம் போன்ற கதிரியக்க தனிமங்களின் செறிவு அதிகம் உள்ளதாக […]

error: Content is protected !!