அறிவியல் & தொழில்நுட்பம்

11 கிலோ உடல் எடையை குறைக்க உதவிய Ai – மகிழ்ச்சியில் தகவல்களை பகிர்ந்த நபர்

  • July 17, 2023
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான ChatGPT கொடுத்த அறிவுரையைப் பின்பற்றி ஒருவர் 11 கிலோ உடல் எடையைக் குறைத்திருக்கிறார். ChatGPT கொடுத்த அறிவுரை என்ன என்பதைப் பார்த்து உடற்பயிற்சியாளரே வியந்துவிட்டார் என தெரியவந்துள்ளது. ChatGPT வழங்கிய உடற்பயிற்சி ஆலோசனையை பின்பற்றிய நபர் ஒருவர் 3 மாதங்களில் 11 கிலோ எடையைக் குறைத்திருக்கிறார். கொடுக்கப்பட்ட உடற் பயிற்சி திட்டத்தில் கடுமையாக செய்யும் பயிற்சிகள் எதுவும் இல்லை என்பதே சிறப்பு அம்சமாகும். அமெரிக்காவில் வசித்து வரும் ‘கிரெக் முசென்’ என்பவர், ஒரு […]

இலங்கை

பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று!

  • July 17, 2023
  • 0 Comments

பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில்,  எதிர்வரும் பாராளுமன்ற வாரத்தின் விவகாரங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளது. அத்துடன்  பல சட்டமூலங்கள் குறித்தும் கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த பாராளுமன்ற அமர்வில், சுங்கச் சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகியவை விவாதிக்கப்பட உள்ளன.

உலகம்

உலகில் பசுமையான இடங்களில் வாழ்பவர்களுக்கு ஆய்வில் வெளியான மகிழ்ச்சியான தகவல்

  • July 17, 2023
  • 0 Comments

பசுமையான இடங்களில் வாழ்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்று ஆய்வில் தெரியவந்துள்ளது. பசுமையான இடங்களில் வாழ்பவர்கள் இளமையாகவே தோன்றமுடியும் என இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நகரப் பூங்காக்களும் பசுமைவெளிகளும் நமக்கு மிகவும் முக்கியம். வெப்பத்தைக் குறைக்கின்றன. பல்லுயிர்ச் சூழலை ஊக்குவிக்கின்றன. மேலும் நகரச் சூழலை அமைதியாக்குகின்றன. முக்கியமாக இளமையாகவே தோன்றமுடியும் என குறிப்பிடப்படுகின்றது. “Science Advances” என்ற சஞ்சிகையில் அதன் ஆய்வு வெளியானது. பசுமை இடங்களைச் சுற்றி வசிப்பவர்கள் சராசரி மனிதர்களுடன் ஒப்பிடுகையில் இரண்டரை வயது குறைந்து காணப்படுவார்கள் […]

இலங்கை

சவுதி அரேபியாவில் மோசமாக நடத்தப்படும் இலங்கை பெண்கள்!

  • July 17, 2023
  • 0 Comments

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு புலம்பெயரும் தொழிலாளர்கள் அந்நாடுகளில் சொல்லொனா துன்பங்களை அனுபவிக்கின்றனர். அந்தவகையில், நுவரெலியாவில் இருந்து சவுதி அரேபியாவிற்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற பெண் ஒருவர் மிக மோசமான சித்திரவதைகளை அனுபவித்துள்ளார். அவருடைய உடலில் ஊசிகள் செலுத்தி சித்திரவதை செய்யப்பட்டதாக கூறியுள்ளார். ருத்துவபரிசோதனையின்போது ஐந்து நீளமான ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நுவரேலியாமாவட்ட மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார். ஒன்பது நாள் மிகமோசமான சித்திரவதையின் பின்னர் சிவரஞ்சினி இன்னுமொரு இலங்கையரின் உதவியுடன் அந்த வீட்டிலிருந்து வெளியேறி […]

உலகம்

விமானிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு : பெண் பயணியின் துணிச்சலான செயல்! (வீடியோ)

  • July 17, 2023
  • 0 Comments

விமானிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், பயணி ஒருவர் விமானத்தை இயக்கி மக்களை காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்கின் வெஸ்ட்செஸ்டரில் இருந்து புறப்பட்ட ஒரு சிறிய விமானத்தை இயக்கிய விமானக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த விமானத்தில் பயணித்த கனெக்டிகட் பெண் ஒருவர் தக்க சமயத்தில் விமானத்தை இயக்கி மாசசூசெட்ஸின் மேற்கு டிஸ்பரியில் உள்ள மார்தாஸ் வைன்யார்ட் விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு அருகே தரையிறக்கினார். இதனால் குறித்த விமானத்தில் பயணித்த அனைவரும் காப்பாற்றப்பட்டனர். […]

ஐரோப்பா

பிரான்ஸிற்கு உக்ரைனில் இருந்து நவீன ஆயுதங்கள் கொண்டு சென்ற மர்ம நபர்கள்

  • July 17, 2023
  • 0 Comments

உக்ரைனில் இருந்து நவீன ஆயுதங்கள் சிலவற்றை மறைத்து பிரான்ஸிற்கு எடுத்து சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்கவரித்துறையினரால் குறித்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இச்சம்பவம் கடந்த மே மாதம் 7 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவில் இருந்து கலே (Calais) வழியாக பிரான்சுக்குள் நுழைந்த வாகனம் ஒன்றை சுங்கவரித்துறையினர் சோதனையிட்டனர். இதன் போது, வாகனத்திற்கு ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘ரொக்கட் லோஞ்சர்’ ஆயுதம் ஒன்றும் மேலும் பல துப்பாக்கி குண்டுகளும் கைப்பற்றப்பட்டது. […]

ஐரோப்பா

ஜெர்மனியில் வரியால் சர்ச்சை – உணவகங்களில் உணவு அருந்துபவர்கள் நெருக்கடியில்

  • July 17, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் உணவகங்களில் உணவு அருந்துபவர்களிடம் இருந்து பெறப்படும் வரி தொடர்பாக தற்பொழுது சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியில் கொவிட் காலங்களில் உணவு உட்கொள்கின்றவர்களுக்கு உணவு பொருட்களுக்கான மேலதிக வரியானது 19 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைக்கப்பட்டு இருந்தது. இவ்வாறு 7 சதவீதமாக குறைக்கப்பட்டதன் முக்கிய நோக்கம் உணவகங்கள் மூடப்படுவதை தவிர்ப்பதற்காக அவர்களது வருமானத்தை ஓரளவு சரிசெய்வதற்காக அரசாங்கத்தால் இந்த விடயம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது இந்த நடைமுறையானது டிசம்பர் மாதத்துடன் முடிவடையும் வேளையில் மீண்டும் பழைய நிலைமைக்கு அதாவது […]

இலங்கை

இலங்கை தொழிலாளர்களின் வேலை நேரத்தை 16 மணிநேரமாக்க முயற்சி!

  • July 17, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றும் நடவடிக்கையாக உழைக்கும் மக்களின் உரிமைகளை உத்தேச புதிய தொழிலாளர் சட்டங்கள் மூலம் இல்லாதொழிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக   பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இந்த தகவல்களை வெளியிட்டார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  இந்த புதிய சட்டத்தின் மூலம் இதுவரை உழைக்கும் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்திய 13  சட்டங்களை இல்லாதொழிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். “இதுபோன்ற பொருளாதார […]

ஆசியா

சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டவர்களின் வேலைக்கு புதிய சிக்கல்

  • July 17, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டவர்களின் வேலைக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு ஊழியர்களின் படுக்கை இடங்களில் தற்போது பற்றாக்குறை நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையில் தாக்கம் ஏற்படலாம் என கூறப்படுகின்றது. சிங்கப்பூரில் 2022ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் சுமார் 17,000 புதிய படுக்கைகள் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், 2022 தொடக்கம் முதல் பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில் புதிய ஊழியர்கள் அதிகமானோர் […]

இலங்கை

இலங்கையில் மயக்க ஊசி செலுத்தப்பட்ட நோயாளி ஒருவர் உயிரிழப்பு!

  • July 17, 2023
  • 0 Comments

அனுராதபுரம் வைத்தியசாலையில் மயக்க மருந்து செலுத்திய நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த  மரணம் கடந்த மாதம் 06. 28ஆம் திகதி நிகழ்ந்ததாகக் அந்தச் சங்கத்தின் தலைவர்  ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மரணம் தொடர்பில் முறைப்பாடு செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நோயாளியின் அக்குளில் உள்ள கட்டியை அகற்றுவதற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு மயக்க ஊசி செலுத்தியும் சுயநினைவு வராமல் இறந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!