துட்ஸி இனக்குழுவிற்கு எதிரான 1994 இனப்படுகொலையின் 29 வது ஆண்டு நினைவேந்தலை ருவாண்டா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்ற துட்ஸி இனக்குழுவிற்கு எதிரான 1994 இனப்படுகொலையின் 29 வது ஆண்டு நினைவேந்தலை ருவாண்டா வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஜனாதிபதி பால் ககாமே ஒற்றுமை, கடின உழைப்பு மூலம் சிறந்த மற்றும் வளமான நாட்டைக் கட்டியெழுப்ப சுயநிர்ணயத்திற்கு இதன்போது அழைப்பு விடுத்தார். தலைநகர் கிகாலியில், இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட 250,000 க்கும் மேற்பட்டவர்களின் இறுதி இளைப்பாறும் இடமான கிகாலி இனப்படுகொலை நினைவிடத்தில் ககாமே இந்த கருத்துக்களை தெரிவித்தார். இன்று, உயிர் பிழைத்தவர்களின் தொடர்ச்சியான தியாகத்தை […]













