காசா மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 12 பாலஸ்தீனியர்கள் மரணம்
காஸா மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 12 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
வடக்கு காசா நகரமான பெய்ட் லஹியா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மத்திய மற்றும் தெற்கு காசாவில் நடந்த தாக்குதல்களில் மேலும் 5 பேர் கொல்லப்பட்டனர்.
காசாவில் உள்ள பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம், என்கிளேவ் பகுதியின் வடக்கில் கடைசியாக செயல்பட்டு வரும் மருத்துவமனையான கமல் அத்வான் மருத்துவமனை, இஸ்ரேலியப் படைகளால் தாக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
“இந்த நேரத்தில், ஆக்கிரமிப்புப் படைகள் மருத்துவமனையின் அனைத்துப் பகுதிகளையும் குறிவைத்து, கமல் அத்வான் மருத்துவமனையின் மீது தொடர்ந்து குண்டுவீசி அழித்து வருகின்றன” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.





