செய்தி தமிழ்நாடு

மனநல பிரச்சனைகளுக்கு தீர்வு

கோவையை சேர்ந்தவர் மனநல மருத்துவர் நான்சி குரியன் மனநலம் தொடர்பான துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், உளவியல் சார்ந்த பிரச்னைகளுக்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக கோவை ஆர்.எஸ் புரத்தில் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இவரது இளைய மகன் மேத்யூ உக்ரைன் நாட்டில் மருத்துவம் பயின்று கொண்டிருந்த போது, அங்கு ஏற்பட்ட ஏற்பட்ட போர் சூழல் காரணமாக மிகுந்த சிரமங்களுக்கு இடையே நாடு திரும்பி உள்ளார்.

இந்தியா திரும்பிய அவர், உக்ரைனில் நாடு திரும்ப முடியாமல் இருந்த தன்னைப்போல மருத்துவ மாணவர்களின் மன உளைச்சல், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு இந்தியாவில் இருந்தபடியே போன் வாயிலாக ஆறுதல் வழங்கியும், உளவியல் ஆலோசனைகளை அளித்து வந்துள்ளார். இந்நிலையில் உளவியல் தொடர்பான பிரச்னைகளுக்கு அனைத்து தரப்பினருக்கும் தீர்வு காணும் வகையில் தொழில் நுட்ப அடிப்படையி்ல் ஹீல் பாக்ஸ் HEALBOXX எனும் செயலியை உருவாக்கி அதில் வெற்றியும் கண்டுள்ளார். அவரது மூத்த சகோதரர் இளம் மருத்துவர் லூக் குரியன் உதவியுடன் இந்த செயலியை உருவாக்கி உள்ளனர்.

இது குறித்து மனநல மருத்துவர் நான்சி குரியன், இளம் மருத்துவர்கள் லூக், மேத்யூ ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தொழில்நுட்ப அடிப்படையிலான மனநலம் காக்கும் உளவியல் ஆலோசனைகள் வழங்கும் செயலியான இதில், தனி நபர்கள், தம்பதிகள், மாணவர்கள் மற்றும் அனைத்து வயதினருக்கும் தனிப்பட்ட முறையில் உளவியல் ஆலோசனை வழங்க உள்ளதாகவும், இந்த செயலியி்ல் இணைந்துள்ள அனைத்து உளவியல் நிபுணர்களும் நன்கு பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்தவர்கள் என தெரிவித்தனர்.

Healboxx செயலியை Android மற்றும் iOS இயங்கு தளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி இருப்பதாகவும், இதில் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பு அம்சங்கள் மூலம் பயனாளர்கள் உளவியல் ஆலோசனை உதவிகளை பெற்று பயனடையலாம். இதன் வாயிலாக மன அழுத்தம், மனச்சோர்வு, பதட்டம், தூக்கமின்மை, உறவுச் சிக்கல்கள், திருமணத்திற்கு முந்தைய ஆலோசனை, குழந்தை வளர்ப்பு, கற்றலில் சிரமங்கள், 18 முதல் 70 வயது வரை உள்ளவர்களுக்கு பொது ஆலோசனை இளம் மாணவர்களுக்கு நேர்காணல் திறன் பயிற்சி உள்ளிட்ட அனைத்து மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

(Visited 5 times, 1 visits today)

NR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content