ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் WhatsApp பாதுகாப்பைக் குறைக்க திட்டம் – தடை செய்ய கூறும் நிறுவனம்

பிரித்தானியாவில் இணையப் பாதுகாப்பு மசோதாவின் கீழ் WhatsApp சேவையின் encrypted-messaging அமைப்பு என்கிற பாதுகாப்பு அம்சத்தை வலுவற்றதாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்வதற்கு பதில் தடை செய்வதே மேல் என்று WhatsApp நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது WhatsApp சேவையில் உள்ள encrypted-messaging அமைப்பால், அந்த நிறுவனத்தால் கூட பயனீட்டாளர்களின் செய்திகளைப் படிக்க முடியாது.

ஆனால் இணையத்தில் குழந்தைத் துன்புறுத்தல் பிரச்சினையைக் கையாள்வதற்கான முயற்சிகளுக்கு அது தடையாய் இருப்பதாகப் பிரித்தானிய அரசாங்கமும் குழந்தைப் பாதுகாப்பு அமைப்புகளும் கூறுகின்றன.

பிரித்தானியாவில் WhatsApp செய்திகளின் ரகசியத்தன்மையைக் குறைத்தால் உலகில் உள்ள மற்ற பயனீட்டாளர்களும் பாதிக்கப்படுவர் என்று நிறுவனத்தின் தலைவர் வில் கத்கார்ட் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் அந்தச் சேவையைப் பயன்படுத்தும் அனைவரும் பாதுகாப்பையே விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  WhatsApp பயனீட்டாளர்களில் 98 விழுக்காட்டினர் பிரிட்டனிற்கு வெளியே இருப்பதால், அங்குச் சேவை தடை செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ளத் தயார் என்று அவர் குறிப்பிட்டார்

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content