ஐரோப்பா செய்தி

பிரான்ஸ் பெண்ணின் அதிர்ச்சி செயல் – 12 வருடங்கள் சிறைத்தண்டனை

பிரான்ஸில் ஜிகாதிப் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்து பெண் ஒருவருக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Douha Mounib எனும் பிரான்ஸ் பெண் பயங்கரவாதிக்கே இச்சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பரிசைச் சேர்ந்த இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதன் முறையாக சிரியாவுக்கு பயணமாகியிருந்தார்.

தனது தாதி படிப்பினை மேற்கொள்ளச் சென்றதாக அவர் தெரிவித்திருந்த நிலையில், பின்னர் அவர் ‘ஜிகாதிக்காகவும் இஸ்லாம் மதத்துக்கு ஆதரவாகவும் போர் புரியப்போவதாக தெரிவித்திருந்தார்.

பின்னர் துருக்கிக்கும் அவர் பயணித்திருந்த நிலையில், துருக்கியில் வைத்து கடந்த 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், விசாரணைகளின் பின்னர் அவருக்கு இவ்வார திங்கட்கிழமை பரிசைச் சேர்ந்த பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content