இலங்கை செய்தி

நான் ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை நாட்டின் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்க மாட்டேன்

தான் ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும்  மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

தாம்  பிரபலமானதை செய்வதற்கு அன்றி சரியானதைச் செய்வதற்காகவே இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, பிரபலமான கருத்துக்களை முன்வைப்பதன் மூலமே நாட்டுக்கு அழிவு ஏற்பட்டது  எனவும் தெரிவித்தார்.

முப்படைகளின்  தளபதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நேற்று (01) அநுராதபுரம் விமானப்படை முகாமில்  இராணுவம், பொலிஸ் மற்றும் ஏனைய படையணிகளை சந்தித்து உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டார்.

சுதந்திரமான கருத்துக்களை வெளியிடவோ அல்லது தன்னை விமர்சிக்கவோ எந்தவொரு தரப்பினருக்கும் உரிமை உள்ள போதும் வீதிகளில் கலவரம் செய்வதற்கு எவருக்கும் உரிமையில்லை எனவும்  ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இன்று எமது நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டது. அந்த விடயத்தை நான், பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் நாட்டுக்கு விளக்கமளித்து  வருகின்றோம்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றத்தை தெளிவுபடுத்திய பின்னர், கடந்த வியாழனன்று  அது தொடர்பில் பொருளாதார நிபுணர்களை அறிவூட்டவும் சந்தர்ப்பம் கிடைத்தது. முப்படை மற்றும்  பொலிஸாரை இன்று  சந்திக்கிறேன்.

மேலும், பல்கலைக்கழக  பொருளாதார நிபுணர்களை சந்திக்கவும் எதிர்பார்க்கிறேன்.  ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்குள் இந்த விடயம்  தொடர்பில் நாட்டு மக்கள் அனைவரையும்  தெளிவுபடுத்த  நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

 

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content