தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு சிறை தண்டனை
தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக்-யியோலின் மனைவி கிம் கியுங்-யியோனுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் வாங்கியதற்காக அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
2022 முதல் 2025 வரை யூன் சுக்-யியோலின் அதிபர் பதவிக் காலத்தில், முதல் பெண்மணி என்ற தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாகவும், 300 மில்லியன் வோனுக்கும் அதிகமான மதிப்புள்ள பரிசுகளை இலஞ்சமாகப் பெற்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நாட்டில் இராணுவச் சட்டத்தை அறிவிக்க மேற்கொண்ட தோல்வியுற்ற முயற்சிக்கு, முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-யியோலுக்கு கடந்த பிப்ரவரியில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், அவர் பல குற்றச்சாட்டுகளின் பேரிலும் விசாரணைகளை எதிர்கொண்டு வருவதாக வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.




