தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்ற இராணுவத்தினர் இலங்கை திரும்பவில்லை என அறிவிப்பு!
பிரிகேடியர் உட்பட 13 இலங்கை இராணுவ அதிகாரிகள் தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்று நாடு திரும்பவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்களை அடுத்து, கடவுச்சீட்டைப் பெறுவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு இலங்கை இராணுவ அதிகாரிகள், அவர்களின் படைப்பிரிவுத் தளபதிகளிடம் அனுமதி பெற வேண்டும் என எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கும் விளக்கமளித்துள்ளது.
இராணுவ சேவையை விட்டு வெளியேறி, திறமையான அதிகாரிகள் உட்பட பெரும்பாலான அதிகாரிகள் வெளிநாடு செல்ல ஆரம்பித்துள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.