ஐரோப்பா செய்தி

சுவீடனில் பயங்கரவாத குற்றச்சாட்டின் அடிப்படையில் ஐவர் கைது!

சுவீடனில் கடந்த ஜனவரி மாதம் புனித குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னர் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் திட்டமிட்ட 5 சந்தேக நபர்களை தான் கைது செய்துள்ளதாக சுவீடன் இன்று தெரிவித்துள்ளது.

சுவீடனிலுள்ள துருக்கிய தூதரகத்துக்கு முன்னால்இ கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின்போதுஇ ஆர்ப்பாட்டக்காரர்களால் புனித குர் ஆன் எரிக்கப்பட்டது.

இந்நிலையில் மேற்படி சம்பவத்தின் பின்னர் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுவதற்குத் திட்டமிட்ட 5 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக சுவீடனின் ரகசிய சேவைப் பிரிவினர் இன்று தெரிவி;த்துள்ளனர்.

இவர்கள் சர்வதேச இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என சுவீடனின் ரகசிய சேவைப் பிரிவின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் பிரதித் தலைவர் சுசானா ட்ரேஹோர்னிங் கூறியுள்ளார்.

குர்ஆன் எரிப்பு தொடர்பில் நாம் செயற்பட்டுக்கொண்டிருக்கும் பல வழக்குகளில் ஒன்று இது எனவும் அவர் கூறியுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content