இலங்கை

சஜித்திற்கு பிரதமர் பதவி வழங்க வேண்டிய தேவை இல்லை – பிரசன்ன ரணதுங்க!

அரசியலமைப்புக்கு அமைய ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை ஜனாதிபதி பிரதமர் பதவிகளில் மாற்றம் ஏற்படாது என வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கடுவலை பகுதியில் நேற்று சனிக்கிழமை (22) இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு    பிரதமர் பதவி வழங்க வேண்டிய தேவை ஏதும் கிடையாது. நெருக்கடியான சூழலில் தலைமைத்துவத்தை ஏற்கும் தைரியம் அவருக்கு கிடையாது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை பிரதமராக நாமே தெரிவு செய்தோம். ஆகவேபிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டிய தேவை ஏதும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை தெரிவுசெய்ய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சரியானது என்பதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அரசியலமைப்புக்கு அமைய ஆட்சிமாற்றம் ஏற்படும் வரை ஜனாதிபதிஇ பிரதமர் பதவிகளில் மாற்றம் ஏற்படாது எனக் கூறினார்.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content