செய்தி முக்கிய செய்திகள்

கடினமான முடிவை எடுத்த மார்க் ஜுக்கர்பெர்க்

ஃபேஸ்புக் சமூக ஊடக வலையமைப்பை வைத்திருக்கும் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் மற்றுமொரு பணியாளர் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது வணிகத்தை மேலும் திறமையாக மாற்றும் நோக்கத்துடன் இந்த செயல்முறையை தொடங்கியுள்ளார் என்று நிறுவனம் கூறுகிறது.

2023 ஆம் ஆண்டை செயல்திறனுடைய ஆண்டாக மாற்றுவதே இதன் நோக்கமாகும்.

சமீபத்திய பணிநீக்கங்கள் அங்கு பணிபுரியும் தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் பிற ஊழியர்களை பாதிக்கும்.

அதன் கீழ் சுமார் 10,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். இந்த செயல்முறை பல மாதங்களாக திட்டமிடப்பட்டுள்ளது.

நிறுவனம் முன்பு சுமார் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content