ஆசியா செய்தி

இத்தாலியில் நடுக்கடலில் சிக்கித் தவித்த 211 அகதிகள் – போராடி காப்பாற்றிய அதிகாரிகள்

இத்தாலியின் லம்பேடுசா தீவு பகுதியின் அருகே நேற்று சீரற்ற வானிலை காரணமாக மீன்பிடி படகில் சென்ற 211 அகதிகள் நடுக்கடலில் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த இத்தாலி கடலோர காவல் படையினர், நடுக்கடலில் சிக்கி தவித்த 211 அகதிகளை பத்திரமாக மீட்டனர்.

இது தொடர்பாக கடலோர காவல் படையினர் கூறும்பொழுது, இத்தாலியின் தெற்கு கடலோரப் பகுதியில் அகதிகள் படகு தத்தளிப்பதை பற்றி தகவல் அறிந்ததும், விரைந்து சென்று 2 ரோந்து படகின் மூலம் அகதிகள் மீட்கப்பட்டதாகவும், அதில் சந்தேகத்திற்குரிய இரண்டு நபர்களை கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இதற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இத்தாலி கடல்பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து 68 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content